கடமலைக்குண்டு,மே.26- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளி மலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகை ஆறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இதுதவிர மூல வைகை ஆற்றை சார்ந்து ஏராள மான ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கட மலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம் மாள்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்று நீர் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. ஒவ்வொருவருடமும் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை வெயில் காலம் என்பதால் மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப் படும். அதுபோன்ற நேரங்களில் கிராமங்களில் இருந்து வெளி யேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் ஆற்றில் குளம் போல தேங்கி காணப்படும். பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் போது அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து உறை கிணறுகளுக்குள் சென்று குடிநீரை மாசுபடுத்துகிறது. இதனால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கும் முதல் இரண்டு வாரங்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்ப தால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே மூல வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகை யில் அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.