districts

மதுரை முக்கிய செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

மதுரை, ஜூன். 16-   மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் இந்த ஆண்டிற்கான முதல் ஆலோசனைக்குழு கூட்டம் ஜூன்  16 வெள்ளியன்று   மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் தலைமையில் நடைபெற்றது.  இதில் மூத்த வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, ரயில்வே அதிகாரிகள், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும்  உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.  கொரோனாவிற்கு முன்பு நீக்கப்பட்ட ரயில் சேவைக ளை திரும்ப வழங்குதல், முன்பு சாதாரண பயணிகள் கட்டண ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் அவ்வாறு இயக்குதல், மதுரை,  திருநெல்வேலி தென் மாவட்ட  நகரங்களுக்கு கூடுதல்  ரயில்கள் இயக்கு தல் உள்ளிட்ட கோரிக்கைகளை பெரும்பாலான உறுப்பி னர்கள் வலியுறுத்தினர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்  எளிதில் செல்வதற்கு பேட்டரி கார் வசதி மேம்படுத் தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பி னர் பாண்டியராஜா  கூறுகையில், மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ்க்கு நிழல் ரயில் இயக்குதல் , பல்வேறு ரயில்வே மேம்பால பணிகள் விரைவுபடுத்து தல், ரயில் பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் அமைத்தல், பழனி ரயில் நிலை யத்தில் தங்கும் அறைகள் அமைத்தல்,  சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்குதல்,   பண்டிகை காலங்களில்  அதிகப்படியான சிறப்பு ரயில்கள் இயக்குதல், இருசக்கர வாகன நிறுத்தங்களில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் வாகனங்களுக்கு வசூல் செய்யக் கூடாது, முக்கிய ரயில் நிலையங்களில் டிக்கெட் கிளார்க்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினோம். 24 ரயில் நிறுத்தங்களை திரும்ப வழங்குவ தற்கான முன்மொழிவை மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக தெற்கு ரயில்வேயிடம் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கூடுதல் நடைமேடைகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.  சென்னை நோக்கி தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் செல்வதால் ரயில் பாதை நெருக்கடி யாக உள்ள நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்குவதற் கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர் என்று  கூறினர்.

டாஸ்மாக் பணியாளர்களை கத்தியால் குத்தியவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திடுக!  

இராமநாதபுரம் ஆட்சியர்-எஸ்.பி.க்கு சிஐடியு கோரிக்கை

இராமநாதபுரம்,ஜூன் 16- டாஸ்மாக் ஊழியர் கண்ணன்  என்பவரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய சுரேஸ்  மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு )சார்பாக மனு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் சமூக விரோதிகள் மிரட்டி இலவசமாக டாஸ்மாக் சரக்கு கேட்பது, கமிஷன் கேட்பது, பணம் கேட்பது,  கொடுக்க மறுத்தால், கடையில் பணியாற்றக் கூடிய ஊழியர்களை தாக்குவது, அரிவாளால் வெட்டுவது, கத்தியால் குத்துவது, கொலை செய்வது என்பது தொடர் நடவடிக்கையாக மாறி இருக்கிறது. இப்படி டாஸ்மாக் கடைகளில் அத்துமீறி செயல்படும் சமூக விரோதி களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும், உயிருக்கு பயந்து பணி செய்யும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தைரியத்தை வரவழைக்கவும், மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி, தலைவர் டி.நம்புராஜன், பொருளாளர் பி.பால்ராஜ், டாஸ்மாக் ஊழியர்கள் வாணி கருப்பன், வீரசேகர் ஆகியோர் மனுவை வழங்கினர். 

ஆட்சியர் சான்றிதழ் வழங்காததால் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்ற குருதி கொடையாளர்கள்

விருதுநகர், ஜூன்.16- விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கா மல் மருத்துவர்கள் மூலம் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியதால் குருதிக் கொடையாளர்கள் ஏமாற்றத்து டன் திரும்பிச் சென்றனர். உலக இரத்த கொடையாளர் தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இரத்த தானத்தில் ஆர்வ முள்ளவர்கள் விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு புதனன்று மாலை அழைக்கப்பட்டிருந்தனர். அதிகமுறை இரத்ததானம் செய்த 5 நபர்களுக்கு நினைவுப் பரிசு சான்றிதழும், மேலும் பலருக்கு சான்றி தழ்களும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வழங்க உள்ளார் எனக் கூறியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி பலர் தங்களது சொந்த பணிகளை விட்டு விட்டு, பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி விடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், பலர் 4மணிக்கே கூட்ட அரங்கிற்கு வந்து காத்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சியோ மாலை 6.10 மணிக்கே தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் குருதி கொடையாளரிடையே 5 நிமிடம் உரை யாற்றினார். அப்போது, அவர் மேலும், குருதி கொடையா ளர்கள், தங்களைப் போல ஆர்வமுள்ள  பலரை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்பு, 100 முறைக்குமேல் இரத்ததானம் செய்த 5  பேரை பாராட்டி நினைவுப் பரிசு சான்றிதழ்கள் வழங்கி னார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர், மாவட்ட ஆட்சிய ருக்கு வேறு பணி இருப்பதால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற குருதிக் கொடையாளர்களுக்கு  மருத்துவர்கள் மூலம்  பாராட்டுச்  சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், குருதிக் கொடையாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதற்காகவா, அன்றாட பணியை விட்டு விட்டு, பல கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கு வந்தோம் என மன வேதனையுடன் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றனர். மேலும், பலர் ஆட்சியர்  கையால் சான்றிதழ் பெறுகி றோம் எனப்  பெருமையுடன் வந்தேன். முடிவில் ஏமாற்றமே  மிஞ்சியது. இதற்கு நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே இருந்திருக்கலாம். பாராட்டை எதிர்பார்த்தா? இரத்ததா னம் செய்து வருகிறோம். ஆட்சியருக்கு ஏராளமான பணிகள் இருந்தால் மற்றொரு தினத்தில் கூட இந்நிகழ்ச்சி யை நடத்தியிருக்கலாம்  என மனக்குமுறலை வெளிப் படுத்தினர்.

மதுரை : சாலையோர கடைகள் அகற்றம்

மதுரை, ஜூன். 16-   மதுரை மாநகராட்சி சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் இருந்து அண்ணா பேருந்துநிலையம் வரை அரசு ராஜாஜி மருத்துவமனையை ஒட்டியுள்ள சாலையோ ரங்களில் இருந்த சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்  மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட மாநகராட்சி  கடைகள் ஜேசிபி மூலமாக இடித்து அப்புறப்படுத்தப் பட்டது  சில கடைகளில்  பொருட்களை  அகற்றும் முன் அவசரமாக கடைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.இதனால் து வியாபாரிகள் சிலர் மாநகராட்சி அதிகாரி களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்  இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு காவல்துறையினரின் பாது காப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள்  நடை பெற்றது.