சின்னாளப்பட்டி, ஏப்.2- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, அலுவலக அதிகாரிகள் பிச்சை, ராமமூர்த்தி உள்ளிட்டோர் சின்னா ளப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த பேருந்து நிலையமாக செயல்பட்டது. இங்கிருந்து ஆண்டிப்பட்டி அணைக்கு கூட பேருந்து இயக்கப்பட்டது. சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல அனுமதி இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்து கள் பேருந்து நிலையத்துக்கு வர மறுக் கின்றன. 44 பேருந்துகள் வந்த பேருந்து நிலையத்தில் தற்போது 25-க்கும் குறை வாகவே வருகின்றன. இப் பேருந்து நிலை யம் காமராஜர் பெயரை கொண்டது. ஆனால் காமராஜர் சிலைக்கு பீடம் கட்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கி றது. பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளது. கழிவறைகள் சீரமைக்கப்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், முன்புபோல் அனைத்து பேருந்துகளும் சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும். நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்து நிலை யத்திற்கு உள்ளே அமைந்துள்ள மீன்கடை களுக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை பேருந்து நிலையத்தின் நடுவில் நிறுத்திவிட்டுச் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.