districts

img

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாநிலை போராட்டம்

சென்னை, அக். 23 - கட்டண சேனல்களின் விலை உயர்வை ரத்து  செய்யக்கோரி சென்னை யில் புதனன்று (அக்.23) கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். கட்டணச் சேனல்கள் ஆண்டுதோறும் விரும்பிய படி கட்டணத்தை உயர்த்திக் கொள்ள டிராய் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் கட்டணச் சேனல் கள் தொகுப்பாக ஆண்டுக்கு  20 விழுக்காடு உயர்த்தி வருகின்றன. இதனை மாற்றி, கட்டண சீரமைப்பு கூட்டுக் குழுவை அமைத்து, 5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணத்தை உயர்த்த வேண்டும். கட்டண சேனல்களின் விலையை அதிகப்பட்சமாக 19 ரூபாய் வரை உயர்த்திக் கொள்ள டிராய் அனுமதி அளித்துள்ளது. இதனை 5  ரூபாயாக குறைக்க வேண் டும். கேபிள் டிவிக்கான 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை  முழுமையாக ரத்து செய்ய  வேண்டும். ஓடிடி தளங்களை  ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து கிராமங்களி லும் அரசு நிறுவனமான டான்பிநெட் கேபிள்களை புதைத்துள்ளது. பராமரிப் பின்றி கிடக்கும் அவற்றை  கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் பராமரித்து பயன் படுத்த அனுமதிக்க வேண் டும். கேபிள்டிவி தொழிலை  சிறுதொழிலாக அங்கீ கரித்து ஆபரேட்டர்களுக்கு மின்கட்டண சலுகை, மானியத்துடன் தொழில் கடன், மானிய விலையில் சூரிய மின்சார உபகரணங் கள் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: கே.பாலகிருஷ்ணன் இந்த போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசியதாவது: புயல் வந்தால் அதிகம் சேதத்தை சந்திக்கும் தொழி லாக கேபிள் டிவி உள்ளது.  புயல் வந்தால் புதிதாக  தொழில் தொடங்குவது போல் முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இந்த தொழிலில் உள்ளவர்க ளுக்கு அரசுகள் நிவாரணம் அளிக்க மறுக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச் சியில் கேபிள் டிவி தொழில்  எத்தனை ஆண்டுகள் நீடிக் கும் என்று தெரியவில்லை. சிறுகுறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களையும் அழித்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் பணியை ஒன்றிய அரசு செய்து வரு கிறது. கட்டண சேனல்களின்  விலைகளை உயர்த்தி, மக் களை கார்ப்பரேட்டுகளின் பக்கம் ஆட்சியாளர்கள் தள்ளி வருகின்றனர். கேபிள்  டிவி தொழிலையும் கார்ப் பரேட்டுகள் கைப்பற்றும் ஆபத்து அதிகரித்துள்ளது. கார்ப்பரேட்டுகளை எதிர்த்து போராடாமல் கேபிள் டிவி தொழிலை பாதுகாக்க  முடியாது. கேபிள் டிவி ஆபரேட்டர் களுக்கு மின்கட்டண சலுகை  கிடையாது. எளிதாக கடன்  கிடைக்காது. ஆனால் 18  விழுக்காடு ஜிஎஸ்டி போடு கின்றனர். கார்ப்பரேட்டுகள் மீதான 30 விழுக்காடு வரியை 15 விழுக்காடாக ஒன்றிய குறைக்கும்போது, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதான ஜிஎஸ்டியை ஏன் குறைக்கக் கூடாது? கார்ப் பரேட்டுகளை விட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணக் காரர்களா? ஒன்றிய அரசை எதிர்த்த குரலுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வலு  சேர்க்க வேண்டும். ஒன்றிய  பாஜக அரசின் பலமே, பொய்ச்செய்தியை பரப்பு வதுதான். அத்தகைய செய்திகளின் ஒளிபரப்பை நிறுத்தினால் உடனே பிரச் சனையை தீர்த்து வைப் பார்கள். கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கோரிக் கைளை நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலியுறுத்து வார்கள். இவ்வாறு அவர் பேசினார். சங்கத்தின் மாநிலத்  தலைவர் சுப.வெள்ளைச் சாமி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர் இரா.அந்திரி தாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கள் பேசினர். கோரிக்கை களை விளக்கி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஆர்.கோவர் தனன் உள்ளிட்ட நிர்வாகி கள் பேசினர். சங்கத்தின்  நிறுவனத் தலைவர் பி.சகி லன் நிறைவுரையாற்றினார்.