districts

img

சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

சின்னாளப்பட்டி, மார்ச் 16-  சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிடம், குடிநீர் வசதிகளை ஏற் படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலை வர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, அவர்களிடம் பேருந்து நிலை யத்தில் இலவச கழிப்பிடம், குடிநீர் வசதி, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள், சுகா தார வசதிகள், சங்கு ஒலிப்பதற்கான பணி கள் செய்து தர வேண்டுமென மக்கள் முறை யிட்டனர்.  அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவோம் என்று பேரூராட்சி தலை வர், துணைத் தலைவர் உறுதியளித்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் காலியாக உள்ள இடங்களில் வணிக வளாகங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.  ஆய்வின் போது, செயல் அலுவலர் நந்த குமார், துப்புரவு ஆய்வாளர் கணேசன், பொறியாளர் ஆனந்தன், மேஸ்திரி சர வணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.