districts

img

பாதுகாப்பு வேலி, சாலை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத மேகமலை அருவி

கடமலைக்குண்டு, ஜுன் 5- தேனி மாவட்டம், கட மலைக்குண்டு அருகே கோம்பைதொழுவில் மேக மலை அருவி அமைந்துள் ளது. 2 ஆண்டுகளுக்கு பின்பு  கடந்த வாரம் மேகமலை அரு வியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தற் போது குறைந்த அளவிலான நீர்வரத்து மட்டுமே உள்  ளது. இருப்பினும் அருவியில் குளிக்க தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்  டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா  பயணிகளுக்கு தலா 30 ரூபாய் வீதம் வனத்துறையினர் சார்  பில் பணம் வசூல் செய்யப் பட்டு வருகிறது.  இந்நிலையில் வனத் துறையினர் சார்பில் வாக னங்களுக்கு பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் உள்ளிட்ட எந்த  வசதிகளும் செய்து கொடுக்  கப்படவில்லை. அருவியி லும் பாதுகாப்பு வேலி, சாலை  உள்ளிட்ட எந்தவித அடிப்  படை வசதிகளும் இல்லை.  மேலும் பெண்களுக்கான உடை மாற்றும் அறை முழு வதும் முட்செடிகள் ஆக்கிர மித்து காணப்படுகிறது. இத னால் பெண்கள் திறந்தவெளி யில் உடை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல அருவியில் வனத் துறையினர் ரோந்து பணி யில் ஈடுபடுவது இல்லை. அருவிக்கு வரும் சுற்றுலா  பயணிகளில் சிலர் மது  அருந்திவிட்டு தகராறில் ஈடு பட்டு வருகின்றனர். எனவே அருவியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகளிடம் வசூல் செய்யும் பணத்தின் மூலம் அருவியில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும் வனத் துறையினர் அவ்வப்போது அருவியில் ரோந்து பணி யில் ஈடுபட வேண்டும் என்று  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.