அருப்புக்கோட்டை, ஜூன் 15- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அல்லாளபேரி கிராமத்தைச் சேர்ந்த பலர் அப்போது நடைபெற்ற சாதி கலவரத்தையொட்டி ஊரை விட்டு வெளியேறினர். பின்பு, காரியாபட்டியில் உள்ள ஜெ.ஜெ.காலனியில் குடியேறினர். இதில் 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. அந்தஇடத்தில் மக்கள் வீடு கட்டி கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்கு தனித்தனியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், அமைப்பின் தலைவர் ச.கருப்பையா மாநில மாணவரணி செயலாளர் செ.பீமாராவ் சாக்யா இரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.