விருதுநகர், ஜன.26- விருதுநகர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் 74-வது குடி யரசு தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலை வர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை யேற்றார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சீனிவாசபெருமாள் வர வேற்றார். பின்பு, தேசியக் கொடியை ஆட்சியர் ஏற்றி வைத்து காவல் துறை யின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 247 அரசு பணியாளர்கள், 9 துணை ஆட்சியர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றி வேந்தன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராஜேஷ் உட்பட 17 அலு வலர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும், சிறப்பாக பணி யாற்றிய 134 காவல் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும் அணி வித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது. இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர். விருதுநகர் நகராட்சியில் ஆணை யாளர் சி.ஸ்டான்லி பாபு தேசியக் கொடி யை ஏற்றி வைத்தார்.