districts

img

வருசநாடு அருகே சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைத்திடுக!

கடமலைக்குண்டு, மே 9- தேனி மாவட்டம், கடமலை-மயிலை  ஒன்றியத்தில் காந்திகிராமம், காமராஜ புரம், அரசரடி, இந்திரா நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகு தியை திருவில்லிபுதூர்-மேகமலை புலிகள்  சரணாலயமாக அரசு அறிவித்தது. அறி விப்பிற்கு பின்னர் வனத்துறையினர் மலைக்கிராம பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.  மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக்கிரமங்களில் சாக்கடை வடிகால்,  சிமெண்ட் ரோடு உள்ளிட்ட எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அனு மதி வழங்குவதில்லை. இதனால் மலைக்  கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக  எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்  கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஏற்க னவே கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை வடி கால்கள் சேதமடைந்த நிலையில் காணப்  படுகிறது. இதனை சீரமைப்பதற்கு கூட  வனத்துறையினர் அனுமதி வழங்குவ தில்லை. இதனால் மலைக்கிராம பொது மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்ற னர். இதற்கிடையே வருசநாடு அருகே  காந்திகிராமத்தில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தொடர் மழையின் காரணமாக  சேத மடைந்தது. இதனை சீரமைக்க வனத் துறையினர் அனுமதி வழங்காத கார ணத்தால் தற்போது சிமெண்ட் சாலை முழு வதுமாக சேதமடைந்த நிலையில் காணப்  படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாக னங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அதே போல இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காய முற்று வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி  கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிரா மங்களில் தேவையான அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.