மதுரை, பிப்.21- மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் புதுப்பிப்புப் பணி களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிப்ர வரி 21 செவ்வாய்க்கிழமையன்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: மதுரை ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒன்றிய அரசினுடைய ரயில்வே துறை ஒப்புதல் வழங்கி அறிவிப்பு செய்தது. அதற்கு நான் ரயில்வே அமைச்சரை நேரில் பார்த்து நன்றி தெரிவித்தேன். ஏனென்றால் புதுப்பிக்கப்படும் ரயில் நிலைய பட்டியலில் மது ரையை இணைக்க வேண்டும் என்று முதலில் இருந்தே கோரிக்கை வைத்தோம். அதை இணைத்து அறி வித்ததற்காக நேரடியாக ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித் தேன், மீண்டும் ஒருமுறை இப்பொ ழுது நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்; 347 கோடி ரூபாய் செலவில் மதுரை ரயில் நிலையத்தை புதுப் பிக்கிற பணி என்பது துவங்கு கிறது. இது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. 2061 ஆம் ஆண்டு மக்கள் தொகை அளவை மதிப்பிட்டு அதற்கு ஏற்றாற்போல இன்றுள்ள திலிருந்து மூன்று மடங்கு பயணி கள் அதிகமாக பயன்படுத்துகிற அளவுக்கான வசதிகளோடு மதுரை ரயில் நிலையம் புனரமைக் கப்படுகிறது. கோவிட் தொற்றுக்கு முதலில் நாள் ஒன்றுக்கு மதுரை ரயில் நிலையத்தை 49 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தினார்கள். இன்றைக்கு 42 ஆயிரம் பயணி கள் பயன்படுத்துகிறார்கள்.
கோவிட் தொற்றுக்கு முன்பு இருந்த நிலையை இன்னும் நாம் அடைய வில்லை. 2061 இல் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்து வார்கள் என்று கணக்கெடுத்து அந்த கணக்கெடுப்பின் அடிப்படை யில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் பயன்படுத்து வதைப் போல ரயில் நிலைய விரி வாக்கப் பணிகள் நடைபெறுகிறது. அதேப்போல நடைமேடை யை அதிகப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்திருந்தோம். ஏனென்றால் நடைமேடையை அதிகப்படுத்தி னால் மட்டும்தான் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். எனவே இப்பொ ழுது நல்ல செய்தி ஏற்கனவே ஆறு நடைமேடை இருந்தது. இப் பொழுது ஏழு நடைமேடையாக அதிகப்படுத்தப்பட உள்ளது. அது நிச்சயமாக கூடுதலான ரயில்களை இயக்கவும் கூடுதலான ரயில்களை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தவும் பயன்படும் என்ற ஒரு நற்செய்தியையும் இந்த நேரத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கி றோம். பெரியார் நிலையத்திலிருந்து சுரங்க நடைபாதை மூன்று ஆண்டுகளில் இந்த பணி என்பது நிறைவடைய இருக்கி றது. ஏற்கனவே நாம் சொன்ன தைப் போல மதுரை பெரியார் நிலை யத்தில் இருந்து ஒரு சுரங்க நடை பாதை நேரடியாக ரயில் நிலை யத்துக்கு வருவதைப் போன்று திட்டமிட வேண்டுமென்று கோரி யிருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று இந்த புதுப்பிக்கிற பணியில் சுரங்கப்பாதை இணைப்பும் சேர்த்து திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல ரயில் நிலை யத்துக்கு வருகிறவர்கள், ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வெளியே செல்கிறவர்கள் இரண் டுக்குமான தனித்தனி வாசல் திட்ட மிடப்பட்டிருக்கிறது.
கூடல்நகர் ரயில்நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்ற தொடர்ந்து வலியுறுத்தப்படும் |
ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதில ளித்தார். கூடல் நகர் ரயில் நிலையம் மறு முனைய மாக மாற்றுவதற்கு போதிய வசதிகள் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது அதை மறுமுனை யமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, கூடல் நகர் ரயில் நிலையம் முக்கிய மானது. தற்போது மதுரை ரயில் நிலைய நடைமேடை பணிகள் நடைபெறுவதால் பாண்டியன், வைகை விரைவு ரயில் கூடல்நகர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இயக்கப்படுவதால் மதுரை மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரு கிறார்கள். மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் ஒரு வாரமாக ரயில்வே நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். கூடல் நகர் ரயில் நிலையம் மறுமுனையமாக மாற்றப் பட வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகம் அமர்ந்து பேச வேண்டும். அதற்கான இணைப்பு இல்லாமல் உள்ளது. நான் பேசியதன் அடிப்படையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள் ளது. அதுவும் ரயில்வே நிர்வாகத்திற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் தான் நடைபெற்றுள்ளது. ஆனால் மாநக ராட்சிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் அது போன்ற வசதி கள் செய்யப்படவில்லை. மாநகராட்சியை அணுகி பேசியபோது, அவர்கள் இது போன்ற பணிகளை செய்கிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு தெரிய வில்லை என்று மாநகராட்சி தரப்பில் கூறுகிறார்கள். அந்த அடிப்படையில் இவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும் .பொதுமக்கள் சார்ந்த பிரச்சனை சுமார் 10 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனையை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் பேசியுள்ளேன். மாநகராட்சி தரப்பில் இன்னும் இரண்டு தினங்களில் அப்பகுதியில் சாலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறியுள்ளனர். அதேபோல் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகமும் கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பாதைக்கான தகவல் பலகை என்பதை உரிய இடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கூறினேன். அதை ரயில்வே நிர்வாகம் உடனடியாக செய்வதாக கூறினர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நானும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் கூடல் நகர் ரயில் நிலை யத்தை ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வு செய்து தற்போதைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கூடல் நகர் ரயில் நிலையம் இரண்டாவது முனையமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கை குறித்து மார்ச் 10 ஆம் தேதி மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசுவோம், கூடல் நகர் ரயில் நிலையம் இரண்டாவது முனைய மாக மாற்றப்பட்டால் அதற்கான சாலை வசதி குறை வாக உள்ளது. எனவே தற்போது கூடல் நகர் அருகில் உள்ள மேம்பாலம் அருகில் ஒரு இணைப்பு பாலம் அமைக்கப்பட வேண்டும் அதற்கான திட்டமிடல் செய்ய வேண்டியது உள்ளது. நிச்சயமாக இந்த பிரச்சனை யினை மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என்றார். மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை கொரோனாவுக்கு பின் நிறுத்தப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நாங்கள் இதுகுறித்து அமைச்சரிடம் பேசி வருகிறோம். நாடாளு மன்றத்திலும் மிக அதிக முறை கேள்விகள் எழுப்பி யுள்ளோம். மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் என்று கூறிக் கொண்டே தான் இருக்கின்றோம். நாடாளுமன்ற நிலை குழுவே மூத்த குடிமக்களுக்கான சில சலுகைகளை நிபந்தனை யுடன் வழங்கலாம் என்றும் கூறியுள்ளது. அதாவது குளிரூட்டப்பட்ட மூன்றாவது வசதி கொன்ட பெட்டி களில் சலுகைகள் கொடுக்கலாம் என்று ஆலோசனை கள் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ரயில்வேத்துறை நிலை குழு பரிந்துரை செய்துள்ளது. ரயில்வே நிர்வா கத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் மூத்த குடி மக்கள் மீதான இறக்கம் வரவில்லை. இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் -13ஆம் தேதி நடைபெற உள்ளது அதில் இது குறித்து கண்டிப்பாக பேசப்படும் நிச்சயமாக ஒன்றிய அரசு மூத்த குடி மக்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என்றார். சென்னை முதல் நெல்லை வரை இரட்டை ரயில் பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் சென்னையில் இருந்து மதுரைக்கு இரட்டை ரயில் சேவை இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. குறிப்பாக தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது ஆனால் மறுமுனையத்திலிருந்து இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இன்னும் இல்லை என்ற கேள்விக்கு. கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கின்றோம். பகல் நேரத்தில் ஒரு விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளோம். மேற்கு மாவட்டத்திற்கு ஒரு கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும். அதாவது இன்டர்சிட்டி போன்ற ரயில்கள் பயண நேரத்தை குறைக்க வேண்டும். ஏனென்றால் இப்போது அதற்கான வசதிகள் உள்ளது. எனவே அதையும் வலியுறுத்துவோம். அதேபோல் சென்னை- போடி ரயில் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது அது ஒரு கூடுதல் ரயிலாக நமக்கு இருக்கும். அதேபோல் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். கோவை மாவட்டத்திற்கு மேலும் ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டத் தொடரில் பேச உள்ளோம் என்று கூறினார். |
அதுவும் ஒரு நல்ல விஷயம் அநேகமாக தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ரயில் நிலையங்கள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாகத் தான் இருக் கிறது. புதுப்பிக்கிற பணியின் மூலம் மதுரை ரயில் நிலையம் இரு வழிப் பாதை கொண்ட நுழைவு வாயில் கள் உருவாக உள்ளது. பயணிகள் அமர 1600 இருக்கைகள் அதேபோல பயணிகள் தங்கு கிற இடம் மூன்று மடங்கு அதிகப் படுத்தப்படுகிறது. பயணிகள் அம ரும் இருக்கைகள் இப்பொழுது 460 இருக்கிறது, இது 1600 இருக்கை களாக அதிகப்படுத்தப்பட இருக்கி றது. அதேபோல கூடுதலாக இரண்டு விஷயங்கள். ஒன்று, பார்சல் வசதிக்கு என்றும், தபால் வசதிக்கு என்றும் வேறு வேறு பகு தியில் இருப்பதால் பயணிகள் நடக்கிற அதே பாதையில் தான் பார்சலுக்கான வழியும் இருக்கி றது. தற்போது அதனை மாற்றிய மைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது கூடுதல் வசதி மற்றும் சிரமங்களை குறைக்கும். அதே போல வாக னங்கள் நிறுத்துமிடம். இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தனி யாகவும், நான்கு சக்கர வாக னங்கள் நிறுத்துமிடம் தனியாக வும் அமைக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பயணி கள் தங்குமிடம் மற்றும் வணிகப் பயன்பாட்டுப் பகுதி முழுவதும் குளிரூட்டப்பட்ட பகுதியாக மாற உள்ளது. 347 கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளுகளில் முடிவடைய உள்ள இந்தப்பணியைப் பொறுத்த வரை பயணிகள் நலன், மதுரை மக்களின் நலன் கருதி உரிய மாற் றங்கள் மற்றும் தலையீடுகள் செய்யப்பட்டு நிச்சயமாக ஒரு முன்னுதாரணமான மிகச்சிறந்த ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் வடிவமைக்கப்படும் என் பதை இந்த நேரத்திலே தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.