‘‘எங்களில் இல்லை இந்து ரத்தம்; எங்களில் இல்லை கிறிஸ்தவ ரத்தம்; எங்களிலில்லை இஸ் லாம் ரத்தம்; எங்களிலுள்ளது மனித இரத்தம்’’ என்னும் கோஷம் வானில் எழுந் தது. அது ஒரு கலவரக் காலம். 1980-களின் துவக்ககாலம் தங்களின் சோதனைக் கள மாக மதவெறி சக்திகள் கன்னியாகுமரியை மாற்றிக் கொண்டிருந்த காலம். இடதுசாரிக ளின் வளர்ச்சியை தடுப்பதற்காக அரசு இயந்திரம் முயன்று கொண்டிருந்தது. மண்டைக்காடு கலவரம் ஆறு உயிர் களை பலி வாங்கியிருந்தது. மாவட்டம் முழு வதும் பதற்றம் நிலவியது. 144 தடை உத்தரவு மாவட்டம் முழுவதும் நிலவியது. எந்த நேரமும் எந்த இடத்திலும் கலவரம் ஏற்பட லாம் என்ற அச்சம் பரப்பப்பட்டது.
அந்தச் சூழலில் குமரி மாவட்டம் மார்த் தாண்டம் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள்தான் அந்த கோஷத்தை எழுப்பி கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீ சார் அவர்களை சுற்றி வளைத்து நின்றனர். சற்று தள்ளி ஒரு போலீஸ் அதிகாரி தோழர் டி.மணியோடு பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது தோழர் டி.மணியும் அதிகாரி யும் தோழர்களை நோக்கி வருகிறார்கள். அதிகாரி பேசுகிறார், ‘‘144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்; ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது. ஆயினும் அமைதியை கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறார் உங்கள் தலைவர். மார்த்தாண்டம் சந்திப்பு வரை ஊர்வலம் நடத்த நான் அனுமதிக்கிறேன்’’ என்கிறார். ஊர்வலம் துவங்குகிறது. ஊர்வலத்தில் இருந்த தோழர்கள் எழுப்பிய கோஷம் தான் அது. வீடுகள் எல்லாம் அடைந்திருக் கின்றன; கடைகள் திறக்கப்படவில்லை; சாலையில் வாகனங்கள் இல்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையை தகர்த்தெறிந்து கொண்டு கம்யூனிஸ்டுகளின் ஊர்வலம் வீதிகளை சூடாக்குகிறது. அந்த கோ ஷத்தை கேட்டு மூடப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள் திறக்கின்றன. மக்கள் பலர் வெளியே வருகின்றனர். ஊர்வலத்தில் இணைந்து கொள்கிறார்கள். அந்த நகரம் சகஜ நிலைக்கு திரும்பியது.
இச்சம்பவம் அந்த தீரமிக்க தோழர் டி.மணியின் வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்களில் ஒரு சம்பவம். மக்களுக்கா கவே வாழ்ந்து மறைந்த ஒரு மகத்தான மக்கள் தளபதி அவர். அதனால் தான் இன்றும் குமரி மண்ணில் மக்கள் மனதில் நிறைந்து வாழ்கிறார். இந்த மாவீரன் வாழ்க்கையில் இருந்து சில துளிகள். 1942 மார்த்தாண்டத்தில் முதல் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை தோழர் ஜி.எஸ்.மணியை செயலாளராகக் கொண்டு அமைக்கப்படு கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் கடைக்கோடியில் இருக்கும் பாவப்பட்டவ னை அணிதிரட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் முய லுகின்றன. 1949 அக்டோபர் மாதத்தில் சிறை யிலிருந்து திரும்புகிற பொழுது மணி, முத்தையன், மார்த்தாண்டம் கோபி, சசி ஆகிய தோழர்கள் தனித்தனியாக பிரிந்து செல்கிறார்கள். கட்சி தடை செய்யப்பட்ட காலம் அது. கொல்கத்தா தீசிஸ் என அழைக்கப்படும் ஆயுதப் போராட்ட அழைப்பு கட்சிக்கு தடை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. தலை வர்கள் தலைமறைவாகச் சென்றனர். அவர்கள் தலைமறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இயங்கினர். ஒருநாள் இரவு மார்த்தாண்டம் அருகே பல்லன்விளை என்ற இடத்தில் ஒரு பனை ஏறும் தொழிலாளி வீட்டின் முன்னால் படுத்து தூங்கி கொண்டிருந்த டி.மணியின் உடலில் துப்பாக்கிகளை வைத்து அழுத்தி அவரை கைது செய்தனர் காவல் துறையினர். மேலும் அவரைச் சங்கிலியால் பிணைத்து காவல்நிலையம் வரை கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து குழித் துறை லாக்கப்புக்கு அழைத்துச் சென்றனர். வழிநெடுக அவரை தாக்கினர்.
இது மக்களுக்கு அச்சமூட்டுவதற்காக செய்யப்பட்டது. உடல் மண்ணில் உராய்ந்து காயங்கள் ஆகியிருந்தன. நீதிமன்றம் செல்லும் போது அவருக்கு குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் தண்ணீர் கொடுக் காத அந்த போலீஸ் அதிகாரிகள், பாத்தி ரத்தில் மூத்திரத்தை கொண்டுவந்து கொடுத்தனர். அந்த லாக்கப்பில் அவரை மூன்று நாட்கள் போலீஸ் தாக்கினர். தோழர் டி.மணியின் கால் எலும்புகள் உடைந்து போயிருந்தன. அந்த நிலையி லும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்கிறார்கள். சிறையில் அவர் உடல் நிலை மோசமானது. அவர் நினை விழந்தார். அவர் சிறையில் இறந்துபோனா ரென்று தகவல் பரவி கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன. ஆனால் அந்த மாவீர னின் உயிர் போகவில்லை. மருத்துவத் தீவிர சிகிச்சை அவரை காப்பாற்றியது. இது முதல் மரணம். இதுஒன்றும் அவருடைய மன உறுதியை தாக்கவில்லை. மீண்டும் தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டார். மக்கள் இயக்கங்களை துவக்கினார். மக்களின் தலைவராக இருந்தார். இந்திய கம்யூனிச வரலாற்றில் மறக்கமுடியாதது புன்னப்புர- வயலார் போராட்டம். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐயப்பன் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். அவர்மீது நடத்தப்பட்ட கொடுமைக ளைக் கண்டித்து பல இடங்களில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. மார்த்தண்டத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது. தோழர் முத்தையன் சிறந்த பாடகர். அந்த கூட்டத்தில் ஒரு பாடலைப் பாடினார். மேடை யில் ஏறிய காவல்துறை அவரையும் தோழர். மணியையும் கைது செய்தது. முத்தைய னின் தொண்டையில் லத்தியால் குத்தியது போலீஸ். காவல்நிலையத்திற்கு அவர்க ளை கொண்டு சென்று கொடூரமாகத் தாக்கினர். தலைகீழாக கயிற்றில் கட்டி தொங்கவிட்டு அடித்தனர்.
உடல் முழுவதும் ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றம் எடுக்க துவங்கியது. அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது அவரது கம்பீரமான மீசை ஒவ்வொன்றாக காவல் துறையினரால் பிடுங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் நினைவிழந்தார். அவருடைய உடலில் இருந்து வந்த நாற்றம் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. மருத்துவ ஊழியர்களும் காவல்துறையின ரும் சுத்தம் செய்ய முடியாமல் இறுதியில் ஒன்னரை தங்கையன், சின்னத் தங்கை யன் ஆகிய இரண்டு தோழர்கள் அவர்கள் உடலைக் கழுவி சுத்தம் செய்தனர். சிகிச்சை பலனளிக்காமல் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. இனி பிழைக்கமாட்டார் என்று உறவினர்கள் வந்து காண்பதற்கு போலீஸ் அனுமதி கொடுத்தது. அவரைப் பார்க்க வந்த உற வினர்கள் கதறி அழுதனர். இந்த செய்தி வெளியே பரவி, தோழர் டி.மணி இறந்து விட்டார் எனக் கருதி கொடிகள் அரைக்கம் பத்தில் பறக்கவிடப்பட்டன. இதிலும் அவர் உயிர் தப்பினார். இது அவரது இரண்டா வது மரணம். வக்கீல் வைப்பதற்கு பணம் இல்லாத சூழலில் தங்கள் வழக்குகளைத் தாங்களே விவாதித்தனர். இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கூர் நாட்டினுடைய பாகமான விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிவேகமாக முன்னெடுக்கப் பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானம் தங்க ளை தனிநாடு என அறிவித்தது.
இதற்கெதிராக பெரும் மக்கள் எழுச்சி வெடித்தது. போராட்டக் கனலில் மாவட்டமே தகித்தது. காவல்துறையின் கொடூர மான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப் பட்டது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து போராட கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது. திரு வாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மூன்று பங்கு ஊழியர்களையும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு பங்கு ஊழியர்களையும் போராட் டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மறியல் செய்து கைது செய்யப் பட்டவர்கள் பல மாதங்களாகியும் விடுதலை செய்யப்படவில்லை. எனவே போராட்டத் தின் திசை வழியை மாற்றி நேரடி போராட் டத்தில் ஈடுபடவேண்டும் என இரண்டு கட்சிகளும் தீர்மானித்தன. அதனடிப்படை யில், 1954 ஆகஸ்ட் 11-ஆம் தேதி விடுதலை நாளாக அறிவித்தனர். அன்று அனைத்து அரசு அலுவலகங்க ளையும் முற்றுகையிடுவதாக தீர்மானித் தனர். பெரிய பிரச்சாரம் மாவட்டம் முழுவ தும் நடத்தப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் துவங்கிய ஊர்வலம் குழித்துறை தாலுகா அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர். கொடிய தடியடி நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பார்சல் செல்லப்பா கொடூரமாக தாக்கப்பட்டார். சற்று நேரத்தில் மார்த்தாண்டம் நக ருக்குள் புகுந்த காவல்துறை கண்மூடித் தனமான தாக்குதலில் ஈடுபட்டது. சந்தை க்கு முன்பக்கத்திலும் தட்டாக்குடி இறக்கம் பகுதியிலும் மூன்று பேரை சுட்டுக்கொன் றது. புதுக்கடையில் ஆறு பேர் சுட்டுக்கொல் லப்பட்டனர். ஜி.எஸ்.மணி மற்றும் டி.மணி ஆகிய இரண்டு மணிகளும் கொல்லப்பட்டு விட்டனர் என்ற செய்தி வேகமாக பரவியது. இது அவரது வாழ்நாளில் மூன்றாவது மரணம்.
மரணத்தை முன் கண்டுகொண்டு மக்களுக்காக போராடுகிற மகத்தான தியாகிகளால்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. அது ஏழை, எளிய மக்களின், தோட்டத் தொழிலாளிகளின், முந்திரித் தொழிலாளர்களின், பனை ஏறும் தொழிலாளர்களின், மீன்பிடி தொழிலா ளர்களின், விவசாயத் தொழிலாளர்களின், இளைஞர்களின் இயக்கமாக, மாணவர் இயக்கமாக, சிறுபான்மை மக்களைப் பாது காக்கும் இயக்கமாக வேகமாக பரந்து விரிந்து கட்டுவதற்கு இறுதி மூச்சுவரை பாடுபட்டவர். குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த பின்னரும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிகமான கோரிக்கை களை முன் எடுத்துக்கொண்டு, 4 முறை சட்ட மன்ற உறுப்பினராக செயல்பட்டார். குழித் துறை நகர்மன்றத் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். நகர் மன்ற உறுப்பினராக நீண்ட காலம் பணி யாற்றினார். 2010 மே 1ஆம் தேதி மறைந்தார். இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் தோழர் டி.மணியால் கட்டி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னெடுத்து செல்வோம். இதுவே அவ ருக்கு ஆற்றும் உண்மையான அஞ்சலி யாக இருக்கும்.
ஜெ.எம்.ஹசன்.
குமரி மாவட்டச் செயலாளர், தமுஎகச.