சென்னை, ஜூன் 24- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வசூ லிக்கப்பட்டு வரும் மேல்வரி 1.25 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக ஜூலை 1-ந்தேதி முதல் குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது. மேலும் பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய தளம் வழியாக www.cmwssb.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூல மாகவும் செலுத்தலாம். எனவே நுகர்வோர் நிர்ண யிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.