districts

img

நூற்றாண்டு நிறைவு

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை தமிழகத்தில் உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், தீக்கதிர் ஏட்டின் வளர்ச்சியில் ரத்தமும் சதையுமாக தன்னை இணைத்துக் கொண்டவருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு  தினம் இன்று.தோழர்கள் அனைவராலும் ‘அத்தா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏ.அப்துல் வஹாப் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கூர் மீரா  லெப்பை சாய்பு - பாத்திமா தம்பதியினரின் கடைசி மகனாக 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பிறந்தார். 

1964ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடை பெற்ற ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ்நாடு கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்த 52 தலைவர்கள் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களில் ஒருவர்.

தோழர் அப்துல் வஹாப்பின் தந்தையார் மீரா லெப்பை சாய்பு 1896ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டபோது கல் காண்ட் ராக்ட் எடுத்திருந்தார். பின்னர்  தோல் வியாபாரம், கல்லுடைக்கும் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்த அவர் பின்னர் திருவிதாங்கூர் மலைக்குச் சென்று ஏலக்காய் பயிரிட்டு பெரும் செல்வந்தரானார். 

தோழர் அப்துல் வஹாப் துவக்கக் கல்வியை கம்பத்தில் முடித்து உத்தமபாளையம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 

மாணவர் தலைவர்

இவர் எஸ்எஸ்எல்சி படித்துக் கொண்டிருந்த போதே மாணவர் சங்கத்தில் சேர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். உத்தமபாளையத்தில் உருவாக்கப் பட்ட மாணவர் சங்க துவக்க விழாவில் பங்கேற்று தோழர் சங்கரய்யா உரையாற்றியுள்ளார். தோழர் சங்கரய்யாவின் உரை அப்துல் வஹாப்பை வெகு வாக ஈர்த்துள்ளது.

பள்ளி இறுதித் தேர்வில் வெற்றிபெற்ற அவர்  இண்டர்மீடியட் படிப்பிற்காக மதுரை அமெரிக் கன் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது தோழர் சங்கரய்யாவுடன் இணைந்து மாணவர் சங்கத்தை உருவாக்கி வளர்த்ததோடு கல்லூரியில் கம்யூ னிஸ்ட் கட்சி கிளைகளும் உருவாக்கப்பட்டன. 

இவர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதால் கல்லூரி நிர்வாகம் ‘செலக்சன்’ எனும் வடிகட்டும் முறை மூலம் இவரை இண்டர்மீடி யட் தேர்வு எழுத முடியாத படி செய்துவிட்டது. 

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற விமானப் படைக்கு ஆள்சேர்க்கும் முகாமில் பங்கேற்ற அவர் தேர்வு செய்யப்பட்டு பெங்களூர் விமானப்படை பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் விடுதலைப் போராட்ட கனல் அவர் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்ததால் வேண்டுமென்றே தேர்வில் தோல்வி அடைந்து அங்கிருந்து வெளியேறினார். 

கடுமையான உணவுப்பஞ்சம் நிலவிய காலம்  அது. கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களோடு இணைந்து எளிய மக்களுக்கு ரேசன் பொருள் பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டார். பின்னர் திருச்சி தனிப்பயிற்சி கல்லூரியில் பயின்ற அவர் அங்கும் மாணவர் சங்கப் பணியில் ஈடுபட்டார். 1946ஆம் ஆண்டு இண்டர்மீடியட் தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பினார். 

ஜனசக்தி பணிக்கு... 
சென்னையில் இயங்கிய ஜனசக்தி அலுவல கப் பணிக்கு வருமாறு கட்சியிலிருந்து கடிதம் வரவே மகிழ்ச்சியோடு அப்பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு வரவு-செலவை கவனிக்கும் பணி தரப்பட்டது.

1948ஆம் ஆண்டு கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் ஜனசக்தி அலுவலகத்தை மூடும் நிலை நேர்ந்தது. கட்சித் தலைமை முடிவுப்படி திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர் சங்கப்பணிக்கு வந்தார். அங்கு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொழி லரசு பத்திரிகையை கவனித்துக் கொண்டார். 

1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தப் போரா ட்டம் துவங்க இருந்தது. பொன்மலை சங்கவளா கம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. ஆனால் வஹாப் தலைமறைவாக இருந்து கட்சி மற்றும் சங்கப் பணியாற்றினார். தலைமறைவு காலத்தில் தஞ்சாவூர் மற்றும் சென்னையிலும் பணியாற்றினார். 

1951ஆம் ஆண்டு கட்சி மீதிருந்த தடை நீக்கப் பட்ட நிலையில் தேவிகுளம் - பீர்மேடு பகுதி யில் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தை உரு வாக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு லெட்சுமி கோவில் தேயிலை எஸ்டேட், லட்சுமி எஸ்டேட், கிளன்மேரி எஸ்டேட், பசுமலை எஸ்டேட் போன்ற தேயிலைத் தோட்டங்களில் சங்கத்தை உருவாக்கி வலுவான போராட்டங்களை நடத்தினார். 

இந்தப் போராட்டங்கள் குறித்த அறிக்கையை தோழர் பி.ராமமூர்த்தியிடம் அப்துல் வஹாப் அளிக்க அது “தேயிலை தோட்டத்திலே” என்ற  தலைப்பில் அவரது தலைமறைவு கால புனை பெயரான ‘சாமி’ என்ற பெயரில் கட்சியால் வெளி யிடப்பட்டது.  பின்னர் கட்சியின் பெரியகுளம் வட்டச்செய லாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். அப்போது இன்றைய தேனி மாவட்டம் முழுவதும் கட்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

கம்பம்  பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற முத்திரை மரக்கால் போராட்டத்தில் விவசாயிகளை திரட்டி போராடியதில் முன்னின்றவர். கட்சியின் ஒன்றுபட்ட மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுபணியாற்றினார்.  1954ஆம் ஆண்டு தோழர் வஹாப்பிற்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆயிஷா பீவிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆயிஷாவின் குடும்பமும் கட்சி குடும்பமாகும். ஆயிஷாவின் சகோதரர் தோழர் பாளையம் அபுபேக்கர்  பின்னர் திருவனந்தபுரம் மேயராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவிய சித்தாந்த போராட்டத்தின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி உருவானபோது, தமிழ்நாட்டில் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் தோழர் வஹாப்பும் ஒருவர். 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் வஹாப் 16 மாதங்களுக்குப் பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

 விடுதலைக்குப் பிறகு கட்சியின் கேரள மாநிலக்குழுவின் வேண்டுகோளுக்கேற்ப கோட்ட யம் மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். பின்னர் தமிழ்நாட்டில் கட்சிக்குப் பணிக்குத் திரும்பிய அவர் 1975ஆம் ஆண்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பல ஆண்டுகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினராகவும் செயல்பட்டுள்ளார்.  1974ஆம் ஆண்டு தீக்கதிர் ஏட்டின் பொது மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், 2001ஆம் ஆண்டு இறுதி வரை அந்தப் பணியை திறம்பட நிறைவேற்றினார்.  வார ஏடாக வெளிவந்துகொண்டிருந்த தீக்கதி ரை தினசரியாக மாற்றுவதற்கு தோழர் கே. முத்தையாவுடன் இணைந்து அடித்தளமிட்டவர் களில் முதன்மையானவர் தோழர் ஏ.அப்துல் வஹாப். 

தீக்கதிரின் அடித்தளம்
தற்போது மதுரை புறவழிச்சாலையில் உள்ள இடத்தை வாங்கி அங்கு தீக்கதிர் அலுவல கத்திற்கான கட்டிடத்தை உருவாக்கியதில் அவரு டைய பங்கு மகத்தானது. நவீன எந்திரங்களை நிறுவியதிலும் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

மதுரையில் தற்போதுள்ள தீக்கதிர் அலுவல கம் குறித்து அவர் கூறுகையில், ‘கட்டிடத்தில் தனியா ருக்கு சொந்தமாக இருந்த பத்து அடிப்பாதை கட்டிடத்தை இரு பகுதியாக பிரித்திருந்தது. இந்நிலையில் தீக்கதிருக்கு அருகில் எனது மகன் பெயரிலிருந்த 6 செண்ட் நிலத்தை நான் அவருக்கு கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அந்த பத்து அடிப்பாதையை தீக்கதிர் கட்டிடத்துடன் இணைத் தேன். இதன் மூலம் கட்டிடம் ஒரே வளாகமானது’.

மேலும் கம்பத்தில் தனது வீட்டு கட்டுமானப் பணிக்காக வாங்கப்பட்டிருந்த நிலை, கதவு,  ஜன்னல் மற்றும் இதர பொருட்களை மதுரைக்கு கொண்டு வந்து மாடியில் எழுப்பப்பட்ட கட்டிடத்திற்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவசரநிலைக் காலத்தில் கடுமையான தணிக்கை முறைக்கு தீக்கதிர் உள்ளான போது தீக்கதிரை தொய்வில்லாமல் கொண்டுவர பாடு பட்டார். அப்போது கட்சி அணிகளிடையே ரகசிய மாக விநியோகிக்கப்பட்ட ‘செய்திக்கதிர்’ என்ற ஏடும் தீக்கதிரில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இவர் பொது மேலாளராக இருந்த போதுதான் தீக்கதிரில் சென்னை பதிப்பு துவக்கப்பட்டது. தற்போது ஐந்து அச்சுப் பதிப்புகள் மற்றும் எண்மப்  பதிப்பாக கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 1982ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை தீக்கதிர் அலுவலகம் தீக்கிரை யாக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளான போது தோழர்களுடன் அலுவலக வாசலில் நின்று அத்தாக் குதலை எதிர்கொண்டு முறியடித்த தீரமிகு தலை  வர் அவர். அவருடைய கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். கட்சி முடிவுகளை விளக்கி அனைவரையும் ஏற்கச் செய்வதில் அவருக்கு நிகர் அவரே.

ஓய்வறியா உழைப்பாளி
தீக்கதிர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்  கட்சியின் மதுரை புறநகர் மற்றும் தேனி மாவட்டக் குழுவுடன் இணைந்து தனது இறுதி மூச்சு வரை கட்சிப் பணியை மேற்கொண்ட கர்மயோகி அவர். ஷாபானு வழக்கில் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் சிறு நூல்களை எழுதியுள்ளார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதி  வெளியிட்டுள்ளார். தேனி பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களிடையே கட்சியை கொண்டு செல்வதில் தனி கவனம் செலுத்தியவர். கட்சித் தலைவர்கள் மற்றும் தோழர் களுக்கு அவருடைய இல்லம் எப்பொழுதும் திறந்தே இருக்கும்.

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்ப்பதிலும் அவர் களை திறன்மிக்கவர்களாக உருவாக்குவதிலும் அவர் தனித்த கவனம் செலுத்தினார். அவரது தூய பணியை தொழிலாளி வர்க்கம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூரும்.