districts

img

கம்பத்தில் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்ட நிதி நிறுவன ஊழியர் உடல் மீட்பு

தேனி, அக்.5- கம்பத்தில் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்ட நிதி நிறுவன ஊழியர்  உடலை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர் . தேனி மாவட்டம், கம்பம் கூலத்தேவர் முக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து  வந்தார். கடந்த 21 ஆம் தேதி  வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து இவரது  மனைவி கனி மொழி 22 ஆம் தேதி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர்  பிரகாஷ் மொபைலில் பேசிய விபரங்களை சேக ரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த  வினோத்குமார்  என்ற ஆட்டோ ஓட்டுநரின்  மனைவி நித்யாவிடம்(25) பழக்கம் இருந் தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தனது மனைவியிடம் நெருங்கிப்பழகி யதால் பிரகாஷை வீட்டிற்கு வரவைத்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்  தார். உடலை தனது நண்பர் ரமேஷ்(31), நித்யா உதவியுடன் உத்தமபாளையம் புற வழிச்சாலையில் உள்ள முல்லைப் பெரி யாற்றில் வீசி இருக்கிறார். இது தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டு உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்ற னர். இருப்பினும் நீரோட்டம் அதிகம் இருந்த தால் உடலை கண்டறிவதில் சிரமம் ஏற்  பட்டது. ஆகவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்வெளியேற்றம் நிறுத்தப பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  மார்க்கை யன்கோட்டை தடுப்பணை அருகே பிர காஷ் உடல் அழுகிய நிலையில் ஒதுக்கிக் கிடப்பது தெரிய வந்தது. உடலை மீட்டு ஆய்வாளர் லாவண்யா விசாரித்து வரு கிறார்.