districts

img

கம்பம் தனியார் பள்ளி நிர்வாகத்தின் அட்டூழியம் கட்டணம் செலுத்தாத மாணவர்களை செய்முறை தேர்வு எழுத விடாமல் வெளியே நிற்க வைத்த கொடுமை

தேனி, ஏப்.26- கம்பத்தில் உள்ள சக்தி விநா யகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் கட்டணம் செலுத்தாத மாண வர்களை செய்முறை தேர்வு எழுத விடாமல், பள்ளியில் வெளியில் நிற்க வைத்து அவமானப்படுத் திய சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. பெற் றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் வன அலுவலக சாலை யில் அமைந்துள்ள சக்தி விநாய கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில்  ஆயிரத்திற்கும் அதிகமான மாண வர்கள் பயின்று வருகின்றனர்.கடந்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளில் கொரோனா தடை காலத்தில் பள்ளிகள் அனைத் தும் செயல் படாமல் இருந்ததால் பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்தனர். கொரோனா தொற்று குறைந் ததை அடுத்து நடப்பாண்டில் பள்  ளிகள் திறக்க தமிழக அரசு உத்தர விட்டு மீண்டும் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் செயல்பட தொடங் கின.  

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் பள்ளி கட்ட ணத்தை செலுத்த கோரி பெற்  றோர்களை கடுமையாக எச்ச ரித்த பள்ளி நிர்வாகம் கண்டிப் பாக பாக்கி இன்றி கட்டணத்தை கட்டும் மாணவர்களுக்கு மட்டும் தான் செய்முறை தேர்வு எழுது வதற்கு அனுமதி அளிப்போம்; பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனு மதிக்க முடியாது என்று அதிகாரப் போக்கில் பள்ளி நிர்வாகம் பெற்  றோர்களிடம் கூறியுள்ளது. கட்ட ணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றி வாசலில் நிற்க வைத்தனர். இதனையடுத்து அங்கு கூடிய பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இச்சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. இருப்பி னும் பள்ளி நிர்வாகம், ‘நீங்கள் எங்கு சென்றும் புகார் அளித்துக்  கொள்ளுங்கள்’ என்று பெற்றோர் களை ஒருமையில் பேசியதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது . மேலும் நீண்ட நேர வாக்கு வாதத்திற்கு பிறகு செய்முறைத் தேர்வு எழுதுவதற்கு மாணவர் களுக்கு பள்ளி நிர்வாகம் அனு மதி அளிப்பதாக கூறி மாணவர்  களை உள்ளே அனுப்பியது. தேர்வு நேரங்களில் மாணவர்களி டம் கல்விக் கட்டணம் கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தும் பள்ளி  நிர்வாகத்தின் மீது பள்ளி கல்வித்  துறை மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்  டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.