இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரி கூட்டரங்கில் சனிக்கிழமையன்று இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து யுவ உட்சவ் 2022 இளையோர் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார் போட்டிகளை துவக்கி வைத்துப் பேசினார்.