தூததுக்குடி, செப்.9- தூத்துக்குடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் வரும் மழைக்காலத்திற்கு முன் பாக முடிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகராட் சியை பொறுத்தவரை மழை பெய்தாலே மாநகரிலுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதி களிலும், முக்கிய சாலைகளி லும் மழைநீர் குளம் போல தேங்கி விடுவது என்பது வழக்கத்தில் இருந்து வரு கிறது. இதனால், மழைக் காலங்களில் மாநகர மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், தூத்துக் குடி மாநகராட்சியின் புதிய மேயராக பொறுப்பேற் றுள்ள ஜெகன் பெரியசாமி தமிழக முதல்அரைமச்சரின் அறிவுறுத்தல்படி மாநக ராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிடாத வகை யிலான அடிப்படை பணி களை முதல்கட்டமாக துவங்கி அவற்றை துரிதமாக மேற் கொண்டு வருகிறார். அதோடு இப்பணிகளை நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து துரிதப் படுத்தியும் வருகிறார். இதன்படி மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வரும் பருவமழையினை கருத்தில் கொண்டு அதற் கான முன்னேற்பாடு பணிக ளாக குடியிருப்புகள், முக்கிய சாலைகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கிடாத வகையில் புதிய தாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வரு கிறது.
இதன்படி, நந்தகோ பாலபுரம், ரஹ்மத் நகர், எஸ்.கே.எஸ்.ஆர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் மழைநீர் வடி கால்கள் அமைக்கும் பணிக ளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேயர் கூறிய தாவது, தூத்துக்குடி மாநக ரில் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு அதற் கான முன்னேற்பாடு பணிகள் தமிழக முதல்வரின் அறிவு றுத்தல்படி துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் புதியதாக அமைக்கப்பட்டு வருவது டன், ஏற்கனவே புழக்கத்தி லுள்ள கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் மழைக்காலத்திற்கு முன்பாக முடித்திட ஒப்பந்த தாரர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக் கும் பணிகள் அனைத்தும் மழைக்காலத்திற்கு முன் பாக முற்றிலும் முடிக்கப் படும் என்றார். ஆய்வின்போது, மாநக ராட்சி அதிகாரிகள், திமுக வட்ட செயலாளர் பி.என்.ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாநகர தொண்டரணி அமைப்பாளர் ராமர், மேய ரின் உதவியாளர்கள் ஜேஸ்பர், பிரபாகர் உள்ளிட் டவர்கள் உடனிருந்தனர்.