மதுரை, ஆக.8- ரயில் ஓட்டுநர்களின் காலியிடங்களை உடனடி யாக போர்க்கால அடிப்படை யில் நிரப்ப வேண்டும். விடு முறை மற்றும் ஓய்வு பாரபட்ச மின்றி வழங்க வேண்டும். விதிகளை மீறி ரயில் ஓட்டு நர்களை வேலை செய்ய நிர்ப் பந்தம் செய்யக் கூடாது. பெண் ரயில் ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் (ஏஐஎல்ஆர்எஸ்ஏ) சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மேற்கு நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் செயல் தலைவர் எம். சிவக்குமார் தலைமை வகித் தார். கோட்டச் செயலாளர் எம். ஜீவா துவக்கி வைத்துப் பேசினார், மதுரை கோட்ட முன்னாள் செயலாளர் ஆர். சங்கரநாராயணன், கோட்ட நிர்வாகி எம். சிவக்குமார், முன்னாள் கோட்டச் செய லாளர் ஆர். கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஜி.சந்தி ரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.