districts

img

இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் ஓராண்டாக செயல்படாத நுண் கதிர் பிரிவு

இராமேசுவரம், மே 22- இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் ஓராண்  டுக்கும் மேலாக நுண் கதிர்  இயந்திரம் பழுதாகி, நுண்  கதிர் பிரிவு செயல்படாமல் உள்ளது.இதனால் நோயா ளிகள் அவதிப்படுகின்றனர்.  இராமநாதபுரம் மாவட் டம், ராமேசுவரம் தீவு பகுதி யில். இராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் பகுதியை உள்ளடக்கி உள்ளது. இந்த  பகுதியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்  ளனர். இராமேசுவரத்தில் அரசு மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி யில் ஆரம்ப சுகாதார நிலை யம் உள்ளது. இதில், பெரும் பாலான நோயாளிகள் இராமே  சுவரம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். நாள் தோறும் 500  முதல் 700 பேர் வரையில்  பொதுமக்கள் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்லுகின்றனர். இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 13 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். ஆண்டுகள் கடந்த நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்து தற்போது 6 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், இராமேசு வரத்தில் தாக்குதலில் காய மடையும் மீனவர்கள், விபத் துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நுண் கதிர்  பிரிவு முக்கியத்துவம் வாய்ந்  ததாக உள்ளது. மாத்திற்கு 30 முதல் 50 பேர் வரையில் எலும்பு முறிவு புகைப்படம் எடுத்து வந்தனர். ஆனால்  தற்போது ஒரு ஆண்டுக்கு  மேலாக நுண்கதிர் இயந்திரம் பழுதாகி, நுண்கதிர் பிரிவு  செயல்படாமல் இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். அவசர தேவைக்கு தனியார் நுண் கதிர் மையத்திற்கு அரசு  மருத்துவர்கள் பரிந்துரை யில் அனுப்பப்பட்டு வரு கின்றனர். இராமேசுவரம் தீவில் 90 சதவீதம் பொதுமக்  கள் பயன்படுத்தி வரும் மருத்துவமனையில் ஒரு  ஆண்டுகளுக்கு மேலான  நுண் கதிர் பிரிவு செயல்படா மல் இருப்பது நோயாளி களை அவதிக்குள்ளாகி வரு கிறது. பழைய நுண் கதிர் இயந்திரத்தை மாற்றி புதிய டிஜிட்டல் வடிவிலான நுண் கதிர் இயந்திரம் வழங்கிட வேண்டும் என்று பொதுமக் கள் மற்றும் அரசியல் கட்சி யினர் கோரிக்கை விடுத்துள் ளனர்.