திண்டுக்கல் அருகே ஆவுளிபட்டி ஊரில் உள்ள ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் அப்பகுதி விவசாயிகளுக்கு வாழைக்கன்று நேர்த்தி செய்யும் முறை பற்றி விளக்கம் அளித்தனர். இதே போல் வடமதுரை வட்டாரத்தில் உள்ள தென்னம்பட்டியில் தொழு உரமிடுவதால் தென்னையில் விளைச்சல் அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.