மதுரை, ஏப்.17- தேசிய மற்றும் மாநில அளவில் நடை பெற்ற வினாடி வினா (திறனறித் தேர்வு) மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ-மாணவிகள். தேசிய திறனாய்வுத் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளி மாண விகள் பா.சாதனா, தனிஷ்கா, ஜோனிஷா மற்றும் அபிஜீத்ராஜ், சுருதிகா, பாலமணி கண்டன், கௌஷிகா, சாம்ரீன்ஜமீலா, தனிஷா, பாண்டிச்செல்வி ஆகிய பத்து மாணவ, மாணவிகளையும் மேயர், ஆணையாளர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரை வெள்ளிவீதியார் மேல் நிலைப்பள்ளி மாணவி பா.சாதனா, தீக்க திர் மதுரைப் பதிப்பில் பக்க வடிவமைப்பா ளராகப் பணியாற்றும் பா.பாரதிதாசனின் மகளாவர்.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எம்.மாரிச் செல்வி தேசிய அளவில் 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற 17-ஆ வது இளையோர் தேசிய தடகளப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் (200மீ) வெண்கலப் பதக் கமும், 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி நகரில் நடைபெற்ற 37-ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன் போட்டியில் தொடர் ஓட்டம் (400மீ) இறுதிப் போட்டியில் பங் கேற்று வெற்றி பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடை பெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு தொடர் ஓட்டம் (400மீ) போட்டி யில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் சுந்தராஜபுரம் மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் எம்சரவணபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிகழ்வில் கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், மண்டலத்தலைவர் பாண் டிச்செல்வி, கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.