districts

மதுரை விரைவு செய்திகள்

பாளை வ.உ.சி. மைதானத்தில்  சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?  பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி, ஏப்.30- பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காகவும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயணம் மேற்கொள்ளவும் மாநகரின் மையப்பகுதியான பாளை வ.உ.சி. மைதானத்தை பயன்படுத்தி வந்தனர்.  தற்போது மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2017-18-ம் ஆண்டில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது.  இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு உபகர ணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர நீர்வீழ்ச்சி கள் போன்ற அமைப்பு, இரும்பு பொருட்களால் ஆன குதிரை உள்ளிட்ட விலங்குகள் உள்ளிட்டவை பார்ப்ப வர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் இவை சிதிலமடைந்து விட்டன. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது குடித்து விட்டு இந்த பூங்காவில் மது பாட்டில்களை வீசி விடும் நிகழ்வுக ளும் அரங்கேறி வருகிறது.  எனவே இந்த பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து மீண்டும் அதனை சீரமைத்து முறை யாக பராமரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்க ளின் கருத்தாக உள்ளது

பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்

திருநெல்வேலி, ஏப்.30- பாளை சாந்தி நகரை சேர்ந்தவர் சங்கர சுப்பிர மணியன். இவர் சமையல் காண்டிராக்டராக உள்ளார்.  இவரது மகள் நாக நாராயணி (20). இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில் நாக நாராயணி வழக்கம் போல் சனிக்கிழமையன்று சாந்தி நகரில் இருந்து சந்திப்புக்கு அரசு பேருந்தில் சென்றார். கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தார்.  மணிக்கூண்டு பகுதியில் பேருந்து வந்த போது நிலை தடுமாறிய நாக நாராயணி பேருந்து படிக் கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக சாந்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, காலை 8 மணி முதல் 9 மணி வரை 4 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படு கிறது. அந்த பேருந்துகள் அருகில் உள்ள சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுவதால் அந்த ஊர்களிலேயே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சாந்தி நகர் வரும் போது பேருந்தில் இடம் இல்லாமல் உள்ளது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அனல்மின் நிலைய கேன்டீன்  ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி, ஏப்.30- தூத்துக்குடி, பெரியசாமி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாடசாமி (25). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலைய கேண்டினில் வேலை பார்த்து வந்தார். தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வர்.  இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இத னால் விரக்தியடைந்த மாடசாமி வெள்ளியன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவிலில்  உண்டியல் வசூல் ரூ.2.33 கோடி

தூத்துக்குடி, ஏப்.30- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்த மாதத்தில் முதல் முறையாக கடந்த 8-ஆம் தேதி எண்ணப்பட்டது. 2-ஆவது முறையாக வெள்ளி யன்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குநருமான பாலசுப்பிர மணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.  இதில், உதவி ஆணையர்கள் ரத்தினவேல் பாண்டி யன் (நாகர்கோவில்), வெங்கடேஷ் (திருச்செந்தூர்), அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, முப்பிடாதி, பகவதி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 8-ஆம் தேதி எண்ணப்பட்ட உண்டியல்களில் இருந்து ரூ.1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 கிடைத்தது.  வெள்ளியன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், அதன் உப கோவில்களான திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், குலசேகரன்பட்டினம் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.85 லட்சத்து 41 ஆயிரத்து 896 கிடைத்துள்ளது.  இந்த மாதம் மட்டும் ரூ.2 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 839-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இதேபோல் தங்கம் 1,925 கிராமும், வெள்ளி 51 கிலோ 65 கிராமும், 62 வெளிநாட்டு பணமும் காணிக்கை யாக கிடைத்துள்ளது.

குமரியில் இடி, மின்னலுடன் மழை: தக்கலையில் 37.3 மி.மீட்டர் பதிவு

குலசேகரம், ஏப்.30- கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் வெள்ளியன்று (ஏப்.30) மாலை இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. தக்கலை பகுதியில் அதிகபட்சமாக 37.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தக்கலை, குலசேகரம், திருவட்டார் அருவிக்கரை,  பேச்சிப்பாறை, திற்பரப்பு, சுருளோடு, பெருஞ்சாணி  உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று பிற்பகல் 3 மணி நேரத்துக்கு மேல் மழை கொட்டியது. சிற்றாறு பகுதிகளில் தண்ணீர் அதிகரித்து திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சனியன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. வெளி மாவட்டங்க ளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.  அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள் ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 271 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 48 அடி உயரமுள்ள அணையில் தற்போது 40.81 அடி நீர் நிரம்பி யுள்ளது. 77 அடி உயரம் உள்ள பெருஞ்சாணி அணை யில் 40.30 அடி நீர் உள்ளது. 18 அடி உயரம் உள்ள சிற்றார் 1,2 அணைகளில் தலா 9.94, 10.04 அடி யும், பொய்கையின் 42.12 அடியில் 18.70 அடியும் நீர்  உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் 54.12  அடி உயரத்தில் 14.12 அடி தண்ணீரும், முக்கடல்அணை யின் 25 அடி உயரத்தில் 8.80 அடி நீரும் உள்ளது. மழையளவு குமரி மாவட்டத்தில் சனியன்று காலை 8 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு: பூதப்பாண்டி 25.6 மி.மீட்டர், சிற்றார் (1) 15.2, மைலாடி 3.2, பேச்சிப்பாறை 22.2, பெருஞ்சாணி 13.4, புத்தன் அணை 14.2, சுருளகோடு 22.6, தக்கலை 37.3, இரணியல் 24, பாலமோர் 4.8, மாம்பழத்துறையாடு 2, கோழிப்போர் விளை 4, அடையாமடை 11, குருந்தன்கோடு 6.4, முள்ளங்கினாவிளை 4.2, முக்கடல் அணை 19 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

ரேஷன் பொருட்கள் வாங்கு  14 கி.மீ பயணம் செய்யும் மக்கள்

திருநெல்வேலி, ஏப்.30- நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை சுற்றி இஞ்சிகுழி, சேர்வலாறு, அகஸ்தியர் காலனி, பெரிய மைலார், சின்ன மைலார் ஆகிய இடங்களில் காணி பழங்குடி மக்கள் பூர்வகுடிகளாக 100 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கின்றனர். இதில் இஞ்சிக்குழியில் வசிக்கும் காணி மக்களின் அன்றாட வாழ்க்கை அவ்வளவு எளிதில் கடந்து செல்வ தில்லை. பிற காணி நிலங்கள் எல்லாம் ஆள் நடமாட்டம் மற்றும் வனத்துறை தொடர்பு வசதிகள் நிறைந்த உள்ளன. ஆனால், இஞ்சிக் குழி என்பது காரையார் அணையை தாண்டி சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் காடுகளுக்குள் அமைந் துள்ளது.          இஞ்சிக்குழியில் ஏழு குடும்பங்க ளைச் சேர்ந்த 24 நபர்கள் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம்தான். வாழை, மிளகு, கிழங்கு உள்ளிட்ட பயிர்க ளை பயிரிட்டு தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.  இவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால், இஞ்சிக்குழியிலிருந்து காரையாறு அணையைக் கடந்து கீழே இறங்கி பள்ளிக்கூடம் சென்று வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அங்கி ருந்து அடர்ந்த காடுகளைத் தாண்டி வனவிலங்குகளின் ஆபத்தையும் மீறி 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து காரையார் அணையை அவர்கள் அடையவேண்டும்.  ரேஷன் பொருள் வாங்குவ தற்காக இஞ்சுக்குழி காணி மக்கள் மாதத்தில் இரண்டு நாள்கள் மிகச் சிரமப்பட்டு கீழே வந்து செல் கின்றனர். இதற்காக அவர்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட காரையாறு அணையை கடப்பதற்கு வனத்துறை சார்பில் படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், படகில் பயணம் செய்ய  வனத்துறை காணி மக்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கி தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக தெரி கிறது. அதேசமயம் விவசாயத்தை தவிர வேறு வருமானம் இல்லாத தால் டீசல் வாங்கி கொடுக்க முடி யாத சூழலில் அவர்கள் உள்ளனர். அணையை சுற்றி கீழே வர வேண்டும் என்றால் கூடுதலாக 10 கிலோ மீட்டர் அவர்கள் நடக்க வேண்டும். 

ஆபத்தான  மூங்கில் படகு பயணம் 

எனவே, காணி மக்கள் சுயமாக மூங்கில் கம்புகளை கொண்டு சங்க டம் கட்டி பெண்கள், குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள் கின்றனர். முதலைகள் மிகுந்த இந்த அணையில் படகில் செல்வது என்பதே மிக மிக ஆபத்து தான்.  ஆனால் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் காணி மக்கள் தற்போது மூங்கில் கம்புகளால் ஆன சங்க டத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து கடந்து செல்கின்றனர். மேலும் ரேஷன் பொருள் வாங்க வேண்டுமென்றால் அவர்கள் மாதம் ஆறு நாள்கள் செலவு செய் தாக வேண்டும். மாதந்தோறும் இரண்டு சனிக்கிழ மைகளில் இவர்களுக்கு காரையார் அணை அருகே உள்ள கடையில் வைத்து ரேஷன் பொருள் வழங்கப் படும். இதற்காக அவர்கள் முதல்நாளே தங்கள் பயணத்தை தொடங்கி, மறுநாள் ரேஷன் பொருள் மற்றும் தங்களுக்கு தேவை யான பிற பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அன்று இரவு மைலாரில் தங்கிவிட்டு, அடுத்த நாள் தான் தங்களது வீட்டிற்கு வருவர். இதுகுறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அபிநயா கூறுகையில், நாங்கள் ரேஷன் பொருள் வாங்குவதற்காக மாதத்தில் இரண்டு நாள்கள் கீழே வருவோம். எங்களி டம் படகில் செல்ல இரண்டு லிட்டர் டீசல் கேட்பார்கள். ஆனால் எங்களி டம் போதிய வருமானம் இல்லாத தால் நாங்களே சங்கடம் கட்டி ஆபத் துடன் அணையை கிடக்கிறோம். எங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இலவசமாக படகில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

319 பேருக்கு நலத்திட்ட உதவிகள் : அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருநெல்வேலி, ஏப்.30- தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணு யிரி சேகரிப்பு திட்டத்தின்கீழ் மண்டல  அளவில் பட்டியல் இன மக்க ளுக்கான உப திட்டத்தில் கால்நடைக ளுக்கான 2 நாள் கண்காட்சி   நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளி யன்று தொடங்கியது.  சனிக்கிழமையன்று கண்காட்சி யை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பார்வையிட்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ரூ.1.60 லட்சம் செலவில் மாடுகள் வளர்ப்போர் 100 பேருக்கு தலா 40 கிலோ மாட்டு தீவனம், ஆடு வளர்ப்போர் 10 பேருக்கு தலா 16 கிலோ ஆட்டு தீவனம், நாட்டுக் கோழி வளர்ப்போர் 100 பேருக்கு 20 கிலோ தீவனம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் மதிப்பில் கோழி கூடுகள், நாட்டுக் கோழி குஞ்சுகள் 19 பேருக்கு வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த 319 பேர் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் கால்நடை பல் கலைக்கழக துணை வேந்தர் செல்வக்குமார், ஆட்சியர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், சண் முகையா, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, பாளை யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியன், கால் நடை பல்கலைக்கழக இயக்குநர் சவுந்தர்ராஜன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி டீன் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.