தேனி, ஜன.19- குமுளி மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் மூளைக்காயமடைந்த சிறுவ னுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை யளித்து பூரண குணமடையச் செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதி யைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த கார் டிசம்பர் 23 அன்று குமுளி மலைப்பாதை யில் விபத்தில் சிக்கியது.இதில் 8பேர் பலி யாகினர். இதில் காயமடைந்த ராஜா (40), இவ ரது மகன் ஹரிஹரன் (7) ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இதில் ஹரிஹர னுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. ராஜாவுக்கு மூளையில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு, உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் இருந்தார். இந்நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை யளிக்க தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் தலைமையில் 19 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ராஜாவுக்கு கழுத்தில் துளையிட்டு, டிரக்கியாஸ்டமி சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளித்தனர். ரத்தம் இதயத்திற்கு சீராக செல்வதற்காக செயற்கை குழாய் பொருத்தப்பட்டு சிவிபி சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு மயக்கத்திலேயே செயற்கை சுவா சம் பெற்று வந்த ராஜாவுக்கு 6-வது நாள் நினைவு திரும்பியது. படிப்படியாக செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு மூச்சுக்குழாயில் போடப்பட்ட துவாரம் மூடப்பட்டது.25 நாட்கள் சிகிச்சை பெற்ற ராஜா முழுமையாக குணமடைந்தார். மருத்துவமனைக்கு வந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் குண மடைந்த ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். சிகிச்சை அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம், அறுவைச் சிகிச்சை நிபுணர் முத்து, மயக்கமருந்து நிபுணர் கண்ணன், அவசரசிகிச்சை துறைத் தலைவர் பாலசுப்ரமணி மற்றும் செவிலி யர்களையும் பாராட்டினார்.