நாகர்கோவில், ஏப்.30- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோ வில் புத்தக கண்காட்சி திடலில் வைத்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் தலைமை யில் கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய காரல் மார்க்ஸ் பிள்ளைத்தமிழ் நூல் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது இதில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க செயலாளர் அ.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.நூர் முகம்மது புத்தகத்தை வெளியிட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஞா.அரங்கசாமி பெற்றுக் கொண்டார். கவிஞர்கள் குமரி எழிலன், பொன்னுலகம் பதிப்பகம் ஜீவா, தெற்கு எழுத்தாளர் இயக்கம் வழக்குரை ஞர் திருத்தமிழ் தேவனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பட்டிமன்றத் துடன் நூல் குறித்து அறிமுக விவாதங்க ளும் நடைபெற்றது