districts

மதுரை விரைவு செய்திகள்

வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில்  கவிதை நூல் வெளியீடு

தூத்துக்குடி, ஜூன் 30- தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக நடைபெற்ற தேசிய புள்ளி யியல் தினவிழாவில் கவிதை நூல் வெளியிடப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக புதனன்று தேசிய புள்ளி யியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வித முன்னறி விப்புமின்றி கொடுக்கப்பட்ட தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான “கணிதவியல் 360° இரவா னாலும், பகலானாலும்” என்ற கவிதை நூல் வெளியி டப்பட்டது. விழாவில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியரும் கல்லூரியின் பயின்றுனர் கழக  உறுப்பினருமான தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு,கவிதை புத்தகத்தை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். புத்தகத்தின் முதல் பிரதி யை கல்லூரி முதல்வர் கனகராஜ் பெற்றுக் கொண்டார். பேராசிரியை சாந்திதேவி கணிதமும் மழலையும் என்ற தலைப்பில் கவிதை தர, மாணவ ஆசிரியர்கள் சிலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். விழாவில் கல்லூரி இணைப்பேராசிரியர் இரசூல் முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். விழாவை மாணவ ஆசிரியர்கள் தேவநேசம், கின்ஸ்லின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். முன்னதாக மாணவ ஆசி ரியை முத்துமாரி வரவேற்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியை பிரேமலதா அறிமுக உரை ஆற்றினார். நிறைவாக மாணவ ஆசிரியை ஈஸ்வரி நன்றியுரை ஆற்றி னார். விழா ஏற்பாடுகளை இணை பேராசிரியை பிரேமலதா, பேராசிரியை சாந்தி தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

மளிகைக் கடையின் பூட்டை  உடைத்து பணம் கொள்ளை

தூத்துக்குடி, ஜூன் 30- தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போய்விட்டது. தூத்துக்குடி முத்தையாபுரம், ராஜூவ் நகரை சேர்ந்த வர் பெருமாள் (38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளி கைக் கடை நடத்தி வருகிறார். புதன் இரவு வியாபாரம்  முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வியாழன் காலை வழக்கம் போல கடையை  திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக் கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது. இது தொடர்பாக அவர் தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வந்து அங்கு பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

மாநகராட்சியில் இன்று முதல்  பிளாஸ்டிக் பைகளுக்கு தடை தூத்துக்குடி மேயர் அறிவிப்பு

தூத்துக்குடி, ஜூன் 30 தூத்துக்குடி மாநகராட்சியில் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித் துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு தீா்மானம் கொண்டு வந்து பேசியது: மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதி களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்  பணிகள் விரைவில் முடிவு பெற உள்ளன. 60 வார்டுகளி லும் பொதுமக்களுக்கு குடிதண்ணீா் வரும் நேரம் அந்தந்த  மாமன்ற உறுப்பினா்கள் மூலம் தகவல் பலகைகளில் எழுதப்பட்டு தெரிவிக்கப்படுகிறது. இதே போல, குப்பை எடுப்பதற்கான வாகனம் எந்த பகுதிக்கு எப்போது வரும்  என்ற தகவலும் மாமன்ற உறுப்பினா்கள் மூலம் ஜூலை 1  முதல் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மாநகரப் பகுதிகளில் உள்ள கழிவுநீா் கால்வாய் களில் மணல் திட்டுக்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள்  நிரம்பியுள்ளதால் அவற்றை அகற்றும் பணி விரைவுப்  படுத்தப்பட உள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால்  அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் உள்ளது போன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பை மற்றும் கப் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை முதல் முழு மையாக தடை விதிக்கப்படுகிறது என்றார். கூட்டத்திற்கு துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில்,  தூத்துக்குடி மாநகராட்சியுடன் கடந்த 2015 ஆம் ஆண் டில் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீள விட்டான், தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 82.98 கோடியில், 36.36 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால் அமைப்பது என்பன உள்பட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபருக்கு 6 மாதம் சிறை

திருநெல்வேலி, ஜூன் 30- இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்  றிய வாலிபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.  நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள துப்பாக்குடி, சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன் (வயது 35). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அந்த  பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.  இதுகுறித்து அந்த இளம்பெண், அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காவல்  ஆய்வாளர் இசக்கி வழக்குபதிவு செய்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 6 மாதங்கள் சிறை தண்ட னையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறி னார்.  இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் அரசு வழக்கறி ஞர் ஜெயபிரபா ஆஜரானார்.

ஐடிஐ படிக்க ஆன்லைன் பதிவு: ஜுலை 20 கடைசி நாள்

நாகர்கோவில், ஜூன் 30- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு  மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலை யங்களில் கலந்தாய்வு மூலம் நடை பெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு 24.6. 2022 முதல் www. skilltraining. tn. gov.  in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய லாம். இதற்கான கடைசி தேதி 20.07. 2022 ஆகும். தொழிற் பயிற்சி நிலைய ங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை  ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.  அரசு தொழிற்பயிற்சி நிலையங்க ளில் சேரும் மாணவர்களுக்கு கட்டண மின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வரு கின்றன. அரசு மற்றும் அரசு உதவி  பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை மாதம் ரூ. 750/-, பேருந்து கட்ட ணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி,  பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடைகள், 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அர சால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்  விவரங்களுக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர் கோவிலில் முதல்வரை நேரில் அணுக வும். 04652-260463, 261463, 265463. அரசு,  தனியார் மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளதால் அரசு ஐடிஐ யில் சேர்ந்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருக்குறுங்குடியில் வாழைகளை நாசம் செய்த குரங்குகள்

திருநெல்வேலி, ஜூன் 30- திருக்குறுங்குடியில் தோட்டத்துக்குள் குரங்குகள் புகுந்து வாழைகளை நாசம் செய்தன.  திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழை களின் குருத்துக்களை முறித்து போட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழை கள் ஆகும். எனவே அந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்கு களை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்  என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தரமற்ற விதை விற்பனை: ரூ.18 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி, ஜூன் 30- தரமற்ற விதைகளை விற்பனை செய்த விற்பனை யாளர்கள் மற்றும் வினியோகஸ் தர்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  தென்காசி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வா ளர்கள் விதை மாதிரிகளை எடுத்து நெல்லை பரி சோதனை நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்த தில், 6 நெல் விதை மாதிரிகள் தரமற்றது என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தரமற்ற விதைகள் முடக்கப்பட்டன.  மேலும் தென்காசி, ஆலங்குளம் மற்றும் மடத்துபட்டி யில் இந்த விதைகளை விற்பனை செய்த விற்பனை யாளர்கள் மீது ஆலங்குளம் நீதிமன்றத்தில் 4 வழக்கு களும், தென்காசி நீதிமன்றத்தில்2 வழக்குகளும் பதியப் பட்டன. இந்த வழக்கில் தரமற்ற விதைகளை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மற்றும் கயத்தாறில் உள்ள விதை வினியோகஸ்தர்களுக்கும், பெங்களூரைச் சேர்ந்த விதை உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்து ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ராக்கெட் ஏவுதளப் பணிகளுக்காக 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது கே.சிவன் பேட்டி

தூத்துக்குடி, ஜூன் 30- குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இதுவரை 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரி வித்தார். தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:  நாட்டில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கத் திட்டமி டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏவு தளத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை விண் ணுக்கு அனுப்ப முடியும். தற்போது பல நிறுவனங்கள் சிறியவகை செயற்கைக் கோள்களை அதிகளவில் தயா ரித்து வருவதால் குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள  இந்த ஏவுதளம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க  2,800 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது என்ற நிலையில் இது வரை 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீத முள்ள நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரு கிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் அந்த இடத்தை கட்டுமானப் பிரிவு குழுவினா் ஆய்வு செய்து எந்தெந்த இடத்தில் எந்தெந்தக் கட்டடங்கள் வர வேண்டும் என  வரைபடம் தயார் செய்து முழு செலவுத் தொகையையும் கணக்கிட்டு வரைமுறைப்படுத்துவர். அதன்பிறகு ராக் கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

குமரியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான  10 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், ஜூன் 30- நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை மற்றும்  குளச்சல் ஆகிய காவல்துறை துணை பிரிவுகளுக்குட்பட்ட காவல் நிலையங்களில் இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழித்துறை, நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம் மற்றும் தக்கலை ஆகிய நீதிமன்றங்களிலிருந்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அந்தந்த காவல் நிலையங்களில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் தலைமறைவானவர்கள் மீது பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி 27.06 2022 அன்று ஒரே  நாளில் மாவட்டம் முழுவதும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடி வருகிறார்கள். இதுதவிர  ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு பல வழக்குகள் உள்ளவர்களிடம், பிரிவு 110 -இன் கீழ் நன்னடத்தை சான்றி தழும் எழுதி வாங்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கடந்த - 2  நாட்களில் 17 பேர் மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.

மரம் விழுந்து 3 பேர் படுகாயம்

நாகர்கோவில், ஜூன் 30- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சித்தி ரங்கோடு பகுதியில் புதனன்று (ஜுன் 29) பெய்த மழையில்  சாலையில் நின்று கொண்டிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அந்தப்  பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டி ருந்த கிருஷ்ண பிரசாத், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜெரின், மற்றும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மரியேந்தி ரன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.  அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த தக்கலை  காவல்துறையினர் சப்பவ இடத்திற்கு விரைந்து வந்து நெடுஞ்சாலை துறையினருடன் சேர்ந்து மரத்தை வெட்டி  மாற்றினார்கள். இதனால் தக்கலை குலசேகரம் நெடுஞ்  சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குழித்துறை பகுதிகளில் மின்தடை

குழித்துறை, ஜூன் 30- நடைக்காவு, தக்கலை, கருங்கல் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் வெள்ளி,சனி, திங்கள், செவ்வாய்  ஆகிய நாட்களில் மின்தடை  அறி விக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை காக்கவிளை, பாத்திமாபுரம், வாறுவிளை, செம்மு தல், தொலையாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.  இதே போன்று முன்சிறை, கருங்கல், நடைக்காவு துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 2) சிறப்பு பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் அம்சி, மணியாரங்குன்று, திப்பிறமலை, எட்டணி, தாறாத்தட்டு, ஆலன்கோடு, மொட்டவிளை, கோட்டவிளை, கம்பிளார்,  கல்லுவிளை, வட்டக்கோட்டை, முருங்கவிளை, கரிக்கி, நேசர்புரம், கல்லாலுமூடு, வாறுதட்டு ஆகிய பகுதிகளுக்கு அன்றைய தினம் காலை  9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றும், முன்சிறை, வீயன்னூர், கருங்கல் துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 4) சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை வயக்கரை, ஆடுதூக்கி, வைக்கல்லூர், மரப்பாலம், சிராயன்குழி, கொல்லன்விளாகம், வேங்கோடு, பாலக்காவிளை, கூட்டமாவு ஆகிய  பகுதிகளுக்கும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) கருங்கல், நடைக்காவு  துணை மின்நிலைய பகுதிகளில்  மேற்கொள்ளப்படும் சிறப்பு பரா மரிப்பு பணிகள் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருஞானபுரம், பாலவிளை, மங்கலக்குன்று, வள்ளவிளை, இளம்பாலமுக்கு, விழுந்தயம்பலம், அரசகுளம், வாவறை. பரப்பற்றுவிளை ஆகிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.