சிவகங்கை,நவ.24- சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே சென்னம்பட்டி கிரா மத்தில் சடலத்துடன் மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டதால் பொதுப்பாதை ஆக்கி ரமிப்பு அகற்றப்பட்டது. சிங்கம்புணரி அருகே சென்னம் பட்டி கிராமத்தில் பொது பாதையை மறைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டி ருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கம்புணரி தாலுகா செய லாளர் காந்திமதி சேதுராமன், மாவட் டக்குழு உறுப்பினர் சாந்தி, தாலுகா குழு உறுப்பினர் சிங்காரம், கேசன் ஆகி யோர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனுக்கொடுத்து பேசினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டு வரு வாய்த்துறை அதிகாரிகள் ,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டு மாத காலத்திற்குள் ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தர விட்டார். இந்த உத்தரவு பிறப்பித்து நட வடிக்கை எடுக்கவில்லை இது போன்ற சூழ்நிலையில் இப்பகுதியில் இறந்த வர் உடலை எடுத்துச் செல்ல பாதை இல்லாமல் பரிதவித்து வந்தனர். இந் நிலையில் இறந்தவர் உடலை வீதியில் வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தாலுகா செயலாளர் காந்தி மதி ,மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி, தாலுகா உறுப்பினர் சிங்காரம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த குமார், கிளைச் செயலாளர் சித்ரா அழகு ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். உட னடியாக காவல்துறை, வருவாய்த் துறை வட்டாட்சியர் சாந்தி மற்றும் அதி காரிகள் தலையிட்டு, உரிய நடவ டிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டது. இதனை தொடர்ந்து இறந்த வர் உடலை எடுத்துச் சென்று இறுதி நிகழ்வு நடந்தது.