காரியாபட்டி, நவ.10- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகா மில் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி 108 பயனாளி களுக்கு ரூ.8 லட்சத்து 84 ஆயி ரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலான முதியோர் உதவித்தொகை, 4 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆதரவற்ற விதவை உதவித்தொகை, 29 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா ரூ.8லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், 16 பய னாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 40 பேருக்கு மின்னனு குடும்ப அட்டைகள், 6 பேருக்கு தாது உப்பு கலவை மற்றும் நாட்டுக்கோழி குஞ்சுகளையும், மூவருக்கு மீன்குஞ்சுகள் என மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.8லட்சத்து 84 ஆயிரம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கல்யாணகுமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்ட ராமன், துணை இயக்குநர் (கால்நடைத்துறை) கோவில் ராஜா, நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாரா யணன், வட்டாட்சியர் விஜய லட்சுமி உட்பட பலர் பங்கேற்ற னர்.