districts

img

பட்டா நிலத்தை அளவிடக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சின்னாளப்பட்டி, ஆக.27- ஆத்தூர் ஒன்றியம் பாறைப்பட்டி, மல்லையாபுரம், ஆத்தூர், அக்கரைப்பட்டி ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச பட்டா நிலத்தை இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து வெள்ளியன்று ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஒன்றியத் தலைவர் சென்ராயன், கிளைச் செயலாளர் முத்துவேல், சிபிஎம் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு தாசில்தார் வடிவேல் முருகனிடம் மனு அளித்தனர்.  அவரும் ஒரு மாத அவகாசத்தில் முடித்து தருகிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.