மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கொடைக்கானலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பேசினர். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், ஒன்றியச் செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.