சின்னாளபட்டி, ஜூலை 7- திண்டுக்கல் மாவட்டம் - ஆத்தூர் - காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நல கூட்டமைப்பு சார்பாக பொருளா தாரத்தில் பின்தங்கிய காசநோய் தொற்றாளர்களுக்கு சுண்டல், பாசிப்பயிறு,மொச்சை, கானப் பயிறு,முட்டை, பேரிச்சம்பழம், நிலக்கடலை பருப்பு உள்ளிட்ட 11 வகை யான ஊட்டசத்துப் பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் மருத்துவர்.எம்.ராமசந்திரன் தலைமை வகித்தார். நம்பிக்கை மைய ஆற்றுநர்.ம.கண்ணன், ஆத் தூர் அரசுமருத்துவமனை மருத்துவர்.எல்.அரவிந்த் நாரா யணன், தலைமை செவிலியர்.மொ.லெட்சுமி, நெல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆ.கருப்பையா மற்றும் சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு.வ.அழகர்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.