மதுரை, ஜன.12- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றி யங்களுக்கு உட்பட்ட தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சி மற்றும் மொக்கத்தான்பாறை ஊராட்சி ஆகிய இடங்களில் ஜனவரி 12 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், பழங்குடியின மக் களை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் 53 பழங்குடி யின குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்களுக்கு வாழ் வாதாரத்தை மேம்படுத்திடும் நோக் கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 62 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணைகள், 22 நபர்களுக்கு மாதாந் திர உதவித்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணை, 53 நபர் களுக்கு குடும்ப அட்டைகள், 48 நபர் களுக்கு வன உரிமை அடையாள அட்டை, சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை சான்று கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் தங்க ளது குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்கான வைப்புத் தொகை செலுத்துவதற்கு இயலாத ஏழ்மை யான சூழ்நிலையில் தாங்கள் வசிப்ப தாகவும், தங்களது குடியிருப்பு களுக்கு மின் இணைப்புகள் வழங் கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இத னையடுத்து, மாவட்ட ஆட்சித்தலை வர் மரு.எஸ்.அனீஷ் சேகர் உத்தர வின்பேரில், அரசின் சிறப்பு திட்ட நிதி யிலிருந்து குறிஞ்சி நகர் பகுதியி லுள்ள 27 பழங்குடியினர் குடியிருப்பு களுக்கு மின் இணைப்புக்கான வைப்புத் தொகை செலுத்தப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகம் மூலம் உடனடியாக மின் இணைப்புகள் வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜனவரி 12 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், குறிஞ்சி நகர் பகு திக்கு நேரடியாக சென்று பழங்குடி யின மக்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை யுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். மேலும், புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்ட குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்ட றிந்தார். அப்போது, தங்களது குடி யிருப்புகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அப்பகுதி மக் கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் எம்.சங்கர லிங்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க. கோட்டூர்சாமி, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பி னர் சு.மலைச்சாமி உட்பட அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.