districts

img

சேமநலநிதியை உடனே வழங்கிடுக

விருதுநகர், மே.16- தமிழ்நாடு அரசானது, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 2017ஆம் ஆண்டுக்குப்பின் ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு காலதாமதமின்றி சேமநல நிதியை வழங்க வேண்டும். 2003ஆம் ஆண்டிற்குப் பின் பணியில் சேர்ந்தவர்க ளுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் விருதுநகரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பணிமனை முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் தங்கப்பழம் தலைமையேற்றார். துவக்கி வைத்து பொதுச் செயலாளர் போஸ் பேசினார். முடிவில் சிஐடியு மண்டல பொது செயலாளர் எம்.வெள்ளைத்துரை உரையாற்றினார். மேலும் இதில்  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச் சாமி, மண்டல பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.