சிவகங்கை, ஜூலை 15- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிங்கம்புணரி ஒன்றிய மாநாடு சிங்கம்புணரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் காந்திமதி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சாந்தி,விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தலைவர் சிங்காரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிங்கம்புணரி ஒன்றியத் தலைவராக கண்ணம்மாள், ஒன்றிய செயலாளராக மாஸ்கோ மலர், பொருளாளராக உமையாள் புகழேஸ்வரி, துணைச் செயலாளராக கோமதி, துணைத்தலைவராக ராஜ லட்சுமி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள்,குழந்தைகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து பணிகள் வழங்கி தாமதம் இல்லாமல் ஊதி யம் வழங்க வேண்டும். எஸ்.செவல்பட்டி, செல்லி யம்பட்டி ஆகிய இரு கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் முழுவதும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழுவேந்தி நகர் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.