விருதுநகர், டிச.12- விருதுநகர் அருகே அனு மான் நகரில் குடியிருப்புப் பகுதியில் தனியார் செல் போன் டவர் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக்கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. விருதுநகர் ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்டது அனுமான் நகர். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறு கிறது. இப்பகுதியில் குழந் தைகள் பள்ளி உள்ளது. வய தானோர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு செல்போன் டவர் அமைத் தால் அதில் இருந்து வெளி யேறும் கதிர் வீச்சால் குழந் தைகள் மற்றும் வயதானோர் பாதிக்கப்படும் நிலை உள் ளது. எனவே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்சி யரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்லம் பட்டி கிளைச் செயலாளர் செல்வக்குமார் தலைமை யில் நடைபெற்ற போராட் டத்தில் நகர் செயலாளர் எல். முருகன், வேல்முருகன், ஸ்டாலின், கார்த்திக்பாபு உட் பட பலர் கலந்துகொண்டனர்.