ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு செயலாளர் பி. மல்லிகா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆர். சசிகலா, மாவட்டச் செயலாளர் -மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள்,பகுதிக்குழு தலைவர் பானுமதி ஆகியோர் பேசினர்.