இராமநாதபுரம்,மார்ச் 14- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்று, குடிமனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார் பில் பரமக்குடி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கு மேற்பட்டோர் பங்கேற்ற காத்திருப்பு போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்க மாநில செய லாளர் இரா. சரவணன் தலைமை வகித்தார். பரமக்குடி வைகை ஆற்றுக்குள் காலங்கால மாக வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வேந் தோணி சர்வே எண் 61 இல் 3 4 7 8 ஆகிய வற்றில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வழங்கப்பட்ட 23 ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்துவிட்டு, மாற்று இடத்தில் இல வச பட்டா மற்றும் வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் வேந்தோணி ஊராட்சி லீலாவதி நகரில் குருவிக்காரர் பரமக்குடி நகராட்சி வைகை ஆற்று பகுதியில் வசிக்கும் மலைக் குறவர் இநரிக்குறவர் மற்றும் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி சமத்துவபுரத்தில் வெற்றி நகரில் வசிக்கும் கணிக்கர் ,பரமக் குடி தாலுகா பகுதிகளில் வசிக்கும் காட்டு நாயக்கர் மக்களுக்கும் பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். லீலாவதி நகர் மக்களுக்கு சுடுகாடு ,ஊரணி அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகனன், மாவட்டத் தலைவர் எம்.முத்து ராமு, சிபிஎம் தாலுகா செயலாளர் டி. ராஜா ஆகியோர் பேசினர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.கே தட்சிணாமூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் ஆர் முனியசாமி ,சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் பசலை நாகராஜன், மாதர் சங்க செயலாளர் அய் யம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கொளுத்தும் வெயிலில் சுமார் ஒரு மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு பின்னர் மலைவாழ் மக்கள் சங்க மாநில செயலாளர் இரா சரவணன், விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பரமக்குடி உதவி ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகி யோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பரமக்குடி உதவி ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட பரமக்குடி பகுதி பழங்குடியின மக்கள் அனைவரையும் அலுவலகத்திற்குள் நேரில் வரவழைத்து கோரிக்கைகள் தொடர் பாக தலைவர்களிடம் கூறிய விவரங்களை சொல்லி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் பின்னர் மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலாளர் இரா சரவணன் பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை விபரங்களை விளக்கிக்கூறினார்.