districts

img

பேரூராட்சிகளில் 100 நாள் வேலை கோரி போராட்டம்

சின்னாளப்பட்டி, செப்.15- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூ ராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சித்தையன்கோட்டை பேரூ ராட்சியில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் அருள்செல் வன், சிபிஎம் வி.கே.முருகன் ராதா உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். 891 மனுக்கள் செயல் அலுவலர் சிவ குமாரிடம் அளிக்கப்பட்டன. மனுவில், பேரூராட்சி பகுதிகளில் விவசாயம் சார்ந்த வேலையை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிராமப்புறங்களில் வழங் கப்படுவது போல பேரூ ராட்சி பகுதிகளிலும் விவசாய தொழிலாளர்க ளுக்கு வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல் படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது.