தேனி, ஏப்.20- வைகை அணையில் தனியா ருக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் அரசு ஏற்று நடத்தி பழைய முறைப் படி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீன வர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தினர் 500க்கும் மேற்பட்டோர் ஏப்ரல் 20 அன்று வைகை அணை தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையில் அணை யை சுற்றியுள்ள சுமார் 18 கிரா மங்களை சேர்ந்த 250க்கும் மேற் பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அணை பயன்பாட்டிற்கு வந்த கடந்த 65 ஆண்டுகளாக மீன்பிடியை அரசே நடத்தி வந்தது. பிடிபடும் மீன்களில் சரிபாதி அரசுக்கும், மறுபாதி மீன வர்களுக்கும் என்ற பங்கு அடிப்ப டையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஒருமாதமாக நிறுத்தப்பட்ட மீன்பிடி கடந்த வாரம் தனியார் மூலம் தொடங்கியது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பங்கு மீன்கள் நிறுத்தப்பட்டு, மீனவர் களுக்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு கூலி வழங்கப்பட்டது. அதன்படி கட்லா, ரோகு, மிருகால் வகை மீன் களுக்கு கிலோவிற்கு 35ம், ஜிலேபி ரக மீன்களுக்கு ரூ.45ம் வழங்கப் பட்டது. இந்த கூலி மீனவர்களுக்கு போதுமானதாக இல்லாததால், வைகை அணை மீன்பிடி உரிமை யில் மீண்டும் பழைய முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மீன்பிடிக்க செல்ல மறுத்து விட்டனர். இந்நிலையில் இதே கோரிக்கை யை வலியுறுத்தி வைகை அணை மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் நீர்தேக்கத்தில் இறங்கி போராட் டத்தை தொடங்கினர். 500க்கும் மேற்பட்ட மக்கள் நீர்தேக்கத்தில் இறங்கி வைகை அணை மீன்பிடி யை அரசே நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்த தும் அங்கு விரைந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கள் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டத்தை கை விடப் போவதில்லை எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். உச்சி வெயிலையும் பொருட் படுத்தாமல் மீனவர்கள் 5 மணிநேரத் திற்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொட ர்ந்து பெரியகுளம் ஆர்.டி.ஓ சிந்து, ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால், ஆண்டிப்பட்டி போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம், மீன் வளத்துறை உதவி இயக்கு னர் பஞ்சராஜா ஆகியோர் தொட ர்ந்து மீனவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.