districts

img

மாணவர் சங்கத் தலைவர் கைதைக் கண்டித்து போராட்டம்

சாத்தூர், ஏப்.25-  தஞ்சை தமிழ் பல்க லைக்கழகத்தில் ஆளுநர்  ஆர்.என்.ரவி கலந்து  கொண்ட பட்டமளிப்பு விழா வில் அப்பல்கலைக்கழகத் தில் படித்து முடித்து பட்டம்  பெற வந்த இந்திய மாண வர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமியை தஞ்சை மாவட்ட காவல் துறையினர் கைது செய்த னர். இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பழனியில் உள்ள  பழனியாண்டவர் கல்லூரி விடுதியின் முன்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜே.தீபக்ராஜ் பேசினார்.   சாத்தூர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு கலை-அறி வியல் கல்லூரி முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு  மாவட்டத் தலைவர்  பால்  பாண்டியன் தலைமையேற் றார்.  வாலிபர் சங்க மாவட்ட தலைவர்  கருப்பசாமி கண்  டன உரையாற்றினார். இதில், சாத்தூர் ஒன்றிய செய லாளர்  வீரஅருண்பாண்டி யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.