மதுரை, ஜூலை 5- அடையாள சான்று, உதவித்தொகை, 100 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கை களுக்காக தர்மபுரி ஆட்சியர் அலுவல கத்தில் போராட வந்த அமைப்பின் மாநி லத்தலைவர்களையும் மாற்றுத்திறனாளி களையும் தாக்கி கைது செய்த காவல்துறை யை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் செவ்வா யன்று ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட உதவித் தலைவர் அ. பாலமுரு கன் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பி னர் வை.ஜென்னியம்மாள், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு செயலாளர் மாமன்ற உறுப்பி னர் டி. குமரவேல், காமராசர் பல்கலைக் கழக தொகுப்புதிய தற்காலிக பணியாளர் சங்க உறுப்பினர் செந்தில்குமார் ஆகி யோர் பேசினர். மறியல் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி யில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.