districts

img

கழிவுநீர் கலக்கும் கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் நாகர்கோவில் மாநகராட்சியில் நீடிக்கும் அவலம்

நாகர்கோவில். பிப். 9- கோயிலை புனிதமாக கருதும் மக்களை யும் அன்றாடம் பயன்படுத்தும் உள்ளுர் மக்களையும் முகம் சுளிக்கச் செய்கிறது அந்த தெப்பக்குளம். மாநகராட்சியாக மாறிய புது அவதா ரத்துடன் தேர்தலை சந்திக்கிறது நாகர்கோ வில். வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ளது கிருஷ்ணன்கோயில் பகுதி. இங்குள்ள கிருஷ்ணன்கோயில் 700 வருட பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. கோயில் அருகில் உள்ள குளத்தில் தான் தெற்போற்சவம் நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த தெப்பக் குளத்தில் சாக்கடை, கழிவு நீர் கலந்து வரு கிறது.

இது பல பலவித தொற்று நோய்கள்  உருவாக வழி வகுத்து வருகிறது. பக்தர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட் டோர் தெப்பக்குளத்தில் தினமும் குளிக்கி றார்கள். அவர்கள் மட்டுமல்லாது இப்பகுதி வாழ் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி யாக உள்ளது. தெப்பக்குளம் பகுதியிலுள்ள குப்பை கழிவுகள் அகற்றப்பட வேண்டும் என்றார் இப்பகுதியில் வசிக்கும் கே.கிருஷ்ணன். இதுபோல் மாநகராட்சியின் 9 ஆவது வார்டு பொதுமக்கள் மேலும் கூறியதா வது: சாலைகள் பழுதடைந்துள்ள நிலை யில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோவிலில் விமரிசையாக நடை பெறும் தேர்பவனி தொடர்ந்து 3 வருடங்க ளாகவே நடக்கவில்லை. அதிக பாரம் ஏற்றப்பட்ட கனரக வாகனங்கள் தாறு மாறாக செல்வதனால் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்து கிடைக்கின்றன. இதனை விரைந்து செப்பனிட்டு மீண்டும் பழைய பொலிவுடன் தேர்பவனி நடக்க வேண்டும் என்பது மாநகராட்சியில் உள்ள 9 ஆவது வார்டு பொது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

 தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படும் குடிநீரானது 3 நாட்களுக்கு ஒருமுறையாவது வர வழிவகை செய்ய வேண்டும். மின் விநியோ கம் துண்டிக்கப்படும் பொழுது வரும் அறிவிப்பு போன்று குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரத்தை மாநகராட்சி மூலம்  அறிவிப்பு செய்வது மிக அவசியமானது. முன்னறிவிப்பு இல்லாமல் வரும்போது பெருமளவு நீர் வீணாகிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் போன்றவற்றை கட்டுப்படுத்த அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு  சிசிடிவி கேமராக்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மணி என்பவர் கூறுகையில், கோவில் அமைந்திருக்கும் பகுதியில் போதை  ஆசாமிகள் வீசிச் செல்லும் கழிவு பொ ருட்கள் கோயிலை இழிவுபடுத்துவதுபோல் உள்ளன. இவை தெப்ப குளம் பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் ஓடைகள் மற்றும் மடைகளில் சென்று அடைத்துக் கொள்கின்றன. மழை காலங்களில் நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கும். இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. இங்கு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்படு பவர் இந்த சுகாதார பணியில் கொஞ்சம் கவனம் செலுத்தி சுத்தமான பகுதியாக மாற வழிவகை செய்ய வேண்டும் என்றார்.