மதுரை, பிப்.5- மதுரை மாநகராட்சி மடீட்சியா அரங்கில் புதிதாக தோந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்ட அமைப்பு ஆசிய வளர்ச்சி வங்கியின் கொள்கைகள் பற்றிய திட்ட விளக்கப் பயிற்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் பிப்ரவரி 4 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத் திட்டம் என்பது தமிழ்நாடு 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வளர்ச்சியின் நோக்கங்களை அடைய உதவுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் பல தவணை நிதி வசதி மூலம் 500 மில்லியன் டாலர் நிதி உதவி ஆகும். தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை 2023 மற்றும் தேசிய முதன்மையான நகர்ப்புற திட்டங்கள் அம்ரூத் குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி மிஷன், ஸ்வச் பாரத் மிஷன் ஆகிய திட்டங்கள் அடங்கும். மொத்தம் 1,80,584 வீடுகளுக்கு வாரத்தில் 7 நாட்களும் தண்ணீர் வழங்குவதற்காக 2வது பகுதியின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி திட்ட நகரங்களில் மதுரை மாநக ராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1233 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சமீபத்தில் 409 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 1,63,958 குடும்பங்க ளுக்கு வீட்டு குடிநீர் விநியோகம் இணைப்பை வழங்க ஏசியன் வளர்ச்சி வங்கி தனது கடனை நீட்டிக்க ஒப்புக் கொண்டது. இது வரும் ஆண்டுகளில் நகரின் நீர் பாது காப்பை கணிசமாக மேம்படுத்தும். முதலீட்டு திட்டத்தை வெற்றியடைச் செய்வதற்கும் அதன் நிலைத்தன்மைக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் பங்கு உண்டு. தகுந்த கொள்கை உருவாக்கத்தில் ஒத்துழைப்பு, சமூக பங்க ளிப்பை எளிதாக்குதல் ஆகியவை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆற்றக்கூடிய முக்கிய பணிகள் ஆகும். இக்கூட்டத்தில் துணைமேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலு வலர்கள், ஏசியன் வளர்ச்சி வங்கி ஒருங்கிணைப்பு அணித் தலைவர் ரூப்பய்யன்டட்டா, சென்னை நகரமைப்பு அலு வலகம் மாற்று குடியிருப்பு - மறுவாழ்வு ஆலோசகர் முனைவர். எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.