சித்திரை திருவிழாவை காண வரும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு ஒன்றாம் பகுதிக்குழு சார்பில் தியாகி லீலாவதி நினைவாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், துணை மேயர் தி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், ஆர்.சசிகலா, டி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, கே. அலாவுதீன், பி. ஜீவா, ஏ. பாண்டி மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் பகுதி குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி மற்றும் வாலிபர், மாதர் சங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.