districts

img

அனைத்து வகையான கல்விக்கும் அடிப்படையானது தொடக்கக் கல்வி

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பேச்சு திருவில்லிபுத்தூர், ஜூன் 6- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் 3 மற்றும் 4 ஆம் வகுப்பு கற்றுத் தரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இதனை பார்வையிட்டு மாவட்ட கல்வியியல்  ஆராய்ச்சி - பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளைத் துரை ஆசிரியர்களிடையே பேசியதாவது: குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் கற்கும்  அனைத்து வகையான கல்விக்கும் அடிப்படையாக வும், ஆணிவேராகவும் அமைவது தொடக்கக் கல்வி.  இத்தொடக்கக் கல்வியில், 2020 இல் கொரோனா பெருந்தொற்றினால் 19 மாத கால கற்றல் இடைவெளி  ஏற்பட்டது. கொரோனா கால கற்றல் இடைவெளி யைக் குறைக்கும் பொருட்டு, 2022 ஆம் ஆண்டில் 1 முதல் 3 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும்  எழுத்தும் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறி முகப்படுத்தியது. இத் திட்டப்படி 2025 ஆம் ஆண்டிற்  குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க நிலைப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  தமிழ்  மற்றும் ஆங்கிலம் புரிந்து வாசித்து, எழுதுதல் மற்றும்  கணிதத்தில் அடிப்படைத் திறன்களை பெற்றிருக்க  வேண்டும். குழந்தைகளுக்கு தொடர்ந்து மகிழ்ச்சிகர மான கற்றல் கற்பித்தல் அனுபவங்களை வழங்கிட  எண்ணும் திட்டத்தை 2023-2024 கல்வியாண்டி லிருந்து 4 மற்றும் 5 ம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தற்போது 4 மற்றும் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் குறித்த பயிற்சி நடைபெறு கிறது. இப் பயிற்சியில் மாணவர்களுக்கு எவ்வாறு எளிய கற்றல் உபகரணங்களைத் தயாரித்து கற்பிப்பது, மாணவர்களை ஆர்வமூட்டும் வகையில் கற்றல் செயல்பாடுகளை எவ்வாறு கொண்டு செல்வது என பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.