districts

img

கயிறு வலையின் மூலம் மண் அரிப்பு தடுப்பு மஞ்சளாறு அணையில் தேனி ஆட்சியர் ஆய்வு

தேனி, ஜூன் 7-  சோதனை முயற்சியாக மண்ணரிப்பை தடுப்பதற்கு  போடப்பட்ட  கயிறு வலை   செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர். வி.ஷஜீவனா நேரில் ஆய்வு செய்தார் . பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக சோதனை முயற்சியாக  கரை பகுதி முழுவதும் தென்னை நாரினால்  செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு  மூடப்பட்டது.  இத்திட்டம் ஆறு மாதங்கள் கழித்தும் எந்தவித மண்ணரிப்புமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததுபோல் சிறப்பாக  செயல்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயல்பட இத்திட்  டத்தை ஊரக வளர்ச்சித் துறை கட்டுப் பாட்டில் உள்ள குளங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்கு  சோதனை முறையில் பயன்  படுத்துவதற்காக அனைத்து வட்டார வளர்ச்சி  அலுவலர்களுக்கும், செயற்  பொறியாளர்களுக்கும்,  மற்றும் மேற்பார்  வையாளர்களுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வின்போது மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் மதுமதி , செயற்பொறியாளர் முருகன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.