விருதுநகர், டிச.14- விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் நடை பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 131 பயனாளிகளுக்கு ரூ.31,97,901 மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார். இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில், 35 பயனாளிகளுக்கு தலா ஆயி ரம் ரூபாய் மதிப்பிலான முதியோர் உத வித்தொகையும், ஆதிதிராவிடர் காலனி யில் 36 பயனாளிகளுக்கு ரூ.16லட்சத்து 7ஆயிரத்து 120 மதிப்பில் பட்டாக்களும், 11 பேருக்கு ரூ. 43 ஆயிரத்து 2791 மதிப்பி லான பட்டாக்களும், மூவருக்கு பட்டா மாறு தல் உத்தரவுகளும், வேளாண்மைத்துறை யின் சார்பில் 10 பயனாளிகளுக்கு 66625 மதிப்பிலும் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பில் என மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ. 31லட்சத்து 97ஆயிரத்து 901 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சாத்தூர் கோட்டாட்சி யர் அனிதா, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (சுகா தாரப்பணிகள்) கலுசிவலிங்கம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.