districts

img

தேனி மாவட்டத்தில் கோடியில் புரளும் மின்வாரியம்

தேனி, ஜன.10- போலி ஆவணம் தயாரித்து, இல வச மின்சாரம் மோசடியாக வழங் கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள் ளது. உதவிப் பொறியாளர் முதல் கண்காணிப்பு பொறியாளர் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  தேனி மாவட்டத்தில் ஒரு விவ சாயிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள இலவச மின்சார இணைப்பைத் துண் டிக்காமல், அடுத்த கோட்டத்தில் உள்ள நபரின் பெயருக்கு மாறுதல் செய்து ,அதே மின் இணைப்பு எண் ணில் வேறு நபருக்கு பணம் பெற்றுக் கொண்டு இலவச மின்சாரம் கொடுக் கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த ஜி.உசிலம்பட்டி -ராமலிங்காபுரம் கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் ராம கிருஷ்ணன் தலைமையில் திங்க ளன்று மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்தி ருந்த மனு பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.  தலைமுறை தலைமுறையாக மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வந்த இவர்கள் தோட்டத்தில் கடந்த வாரம் வந்த மின்வாரிய அதிகாரிகள், உங்கள் மின் இணைப்பு வடிவேல் என்பவரின் பெயரில் உள்ளது. உங் கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதே, எப்படி மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் எனக் கூறி மின்  இணைப்பை துண்டிக்க வந்துள்ள னர்.  அப்போது நான் யாருக்கும் நிலத்தையோ, மின் இணைப்பையோ விற்பனை செய்யவில்லை. எப்படி பெயர் மாறியது தெரிய வில்லை என அவர் கூறியுள்ளார். இதனைத்தொட ர்ந்து அந்தப் பகுதியில் விசாரித்த போது 30-க்கும் மேற்பட்ட இலவச மின் இணைப்புகளை கோட்டம் விட்டு கோட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளது தெரிய வந்துள்ளது. மின் இணைப்பிற்கு பெயர் மாற்றம் கோரி வரும்போது ஆவணத்தை சரி செய்வதோடு, சம்பந்தப்பட்ட இடத்தை உதவிப் பொறியாளர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மின் இணைப்பை இடமாற்றம் செய்யும் போது சம்பந் தப்பட்ட மின் இணைப்பை துண்டித்து, வயர்களை அலுவலகத்திற்கு எடுத்து வந்து பின் உதவிச் செயற்பொறியா ளருக்கு பரிந்துரை செய்யவேண்டும். பின் உதவி செயற்பொறியாளர் செயற் பொறியாளருக்கு பரிந்துரை செய்த பின் இடமாற்றம் நடைபெறும். அது வும் ஒரே கோட்டமாக இருந்தால் மட் டுமே. எனினும் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கோட்டம் விட்டு கோட்டம் மாறுதல் என்றால் கண்காணிப்பு பொறியாளர் இடத்தை ஆய்வு செய்து மின் இணைப்பை இட மாறுதல் செய்ய லாம். ராமலிங்கபுரத்தை சேர்ந்த பொம் மாக்காள் என்பவரின் சர்வீஸ் எண் 38 உள்ள மின் இணைப்பு சின்னமனூரை சேர்ந்த வனராஜ் என்பவர் பெயரி லும், தங்கமுத்து என்பவருக்குச் சொந்தமான சர்வீஸ் எண் கம்பத்தை சேர்ந்த சாமுண்டி கவுண்டர் பெயரி லும், ராமலிங்கம் என்பவரின் சர்வீஸ் எண் பாளையம் ஸ்ரீதரன் என்பவரின் பெயரிலும், சீனித்தாய் என்பவரின் சர்வீஸ் எண் 51 பாளையத்தை சேர்ந்த செல்லமணி என்பவரின் பெயரிலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பகுதியில் மட்டும் 30- க்கும் மேற்பட்ட இணைப்புகள் அவர்களுக் குத் தெரியாமல், அவர்களின் மின் இணைப்பை துண்டிக்காமல் அறிவி யல் பூர்வமாக முறைகேட்டில் ஈடுபட் டுள்ளனர். தட்கல் முறைப்படி மின் இணைப்பு பெற விண்ணப்பம் மட்டும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை தேனி மாவட்டத் தில் விற்பனையானது. தற்போது தமி ழக அரசு அறிவித்துள்ள இலவச மின் சாரத் திட்டத்தில் ஒரு இணைப்பிற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ 2 லட்சம் வரை பெற்று வருகிறார்கள். மோசடியாக நிலத்தையும், மின் இணைப்பையும் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்து, பெயர் மாற்றம் செய்து, கோட்டம் விட்டு கோட் டம் மின் இணைப்புக் கொடுத்து எத் தனை லட்சம் ரூபாய் வாங்கியிருப் பார் என்பது உயர் மட்ட அளவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தெளிவாகத் தெரியும். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர் களை சட்டத்தின் முன் நிறுத்த வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் பெரிய குளம், தேனி, சின்னமனூர் ஆகிய கோட்டங்களில் பெயர் மாற்றம், மின் இணைப்பு இடமாற்றம் குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.