districts

img

முருகன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு  முன்னேற்பாடு பணி

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு  முன்னேற்பாடு பணிகளை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உணவு- உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் ஜனவரி 20 அன்று ஆய்வு மேற்கொண்டனர்.  இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பழனி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கே.எம்.சுப்பிரமணியன், ரா.ராஜசேகரன், சத்யா, ச.மணிமாறன், பழனி வட்டாடட்சியர் சசி உட்பட பலர் உடனிருந்தனர்.