districts

img

சுதந்திரத் திருநாள் சிவகாசியில் வேகமடைந்த தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி

சிவகாசி, ஆக.8- நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 அன்று  சுதந்திரத் திருநாள் கொண்டாடப்படு கிறது. இதற்காக சிவகாசியில் பல்வேறு  வடிவங்களில் தேசியக் கொடிகள்  தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந் துள்ளன. சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில்  தேசியக் கொடிகள் அச்சடிக்கும் பணி களும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அச்சகத்தில் துணியிலான தேசியக் கொடிகள், வார்னீஸ் பேப்பர்,  பளபளக்கும் ஆர்ட் பேப்பர், காகித அட்டை உள்ளிட்ட பல்வேறு வகை களில் தேசிய கொடிகள் தயார் செய்  யப்படுகின்றன. மேலும், சட்டையில் குத்தும் வகையில் சிறிய வடிவிலான காகித தேசியக் கொடிகளும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புகளில் பொருத்  தும் வகையில் அட்டையால் தயா ரிக்கப்படும் தேசிய கொடிகள் அதிகள வில் தயாராகி வருகின்றன.

மேலும், இந்தியா வரைபடத்து டன் கூடிய தேசியக் கொடிகள், தேசத் தந்தை மகாத்மா காந்தி உருவத்துடன் கூடிய தேசியக் கொடிகள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேருவின் உருவத்துடன் கூடிய தேசியக்கொடிகள் அழகிய வடி வங்களுடன், கண்ணைக் கவரும்  டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப் பட்டு வருகின்றன. மேலும், தொப்பி வடிவில் தலையில்  மாட்டிக்கொள்ளும் வகையில் தேசியக்  கொடிகள், கைகளில் காப்பு போல்  அணிந்து கொள்ளும் வகையிலான  தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட் டுள்ளன. இதுகுறித்து தேசிய கொடிகள் தயா ரிக்கும் அச்சக உரிமையாளர் கூறுகை யில், எங்களது அச்சகத்தில் 30 வரு டங்களுக்கும் மேலாக தேசியக் கொடி கள் தயாரிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. துவக்க காலத்தில் பிரபலமான பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தினக்  கொண்டாட்டத்திற்காக தேசிய கொடி களை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிச் சென்றனர். பின்பு, பொது மக்  கள் பயன் படுத்துவதற்காக ஸ்டேச னரி கடைகளில் பல வடிவங்களிலான தேசியக் கொடிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

படிப்படியாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்  தன்று தேசியக் கொடியை சட்டை களில் குத்திக் கொள்ளும் பழக்கம் வேக மாக பரவத் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்க ளிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளில் விற்  பனை செய்வதற்கான தேசியக் கொடி கள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத் தன. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வருகிறது. இந்நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர் பார்த்த அளவில் சிறப்பாக கிடைத் துள்ளது. காகிதக் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடி களின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாகியுள்ளது. ஆனால் இந்த  விலையேற்றம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த இரு மாதங்களாக தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து  வருகிறது. தற்போது தயார் செய்யப்  பட்ட கொடிகளை உரிய இடங்களுக்கு  அனுப்பி வைக்கும் பணிகள் துரிதமாக  நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.