தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி, மே 15- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் நாள்தோறும் ஆயி ரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு ஒரு நாளுக்கு 5 பிரிவுகளில் மின் உற்பத்தி செய்ய 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்நிலையில் கோடைகால மின்சார தேவைக்காக 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்க ளாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 5 பிரிவுகளிலும் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற் பட்டது. இந்த நிலையில், தற்போது நிலக்கரி கையிருப்பு இருந்தும், 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார், அனல் மின் நிலையத்தில் தற்போது 80 ஆயி ரம் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக வும், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி போதுமான அளவு கிடைப்பதாக வும், சென்னை மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் இருந்த வந்த தகவலின் பேரில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத் தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்துக! மாதர் சங்க தூத்துக்குடி புறநகர் மாநாடு கோரிக்கை
தூத்துக்குடி, மே 15- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தூத்துக்குடி புறநகர் பத்தாவது மாநாடு ஜெயகுமாரி தலைமையில் நடை பெற்றது. மாநாட்டு கொடியை ஹைருன் நிஷா ஏற்றிவைத்தார். அஞ்சலி தீர்மா னத்தை கண்ணகி முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் மு. கமலா பேசி னார். சிஐடியு மாவட்ட தலைவர் இரா. பேச்சிமுத்து மாநாட்டை வாழ்த்தி பேசி னார். புறநகர செயலாளர் சரஸ்வதி வேலை அறிக்கையை சமர்பித்தார். 11 பேர் கொண்ட புதிய புறநகர் குழு தேர்வு செய்யப்பட்டு தலைவராக ஹைருன் நிஷா, செயலாளராக கண்ணகி, பொருளா ளராக இசக்கியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் பூமயில் பேசினார். பெண்கள், குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறையை தடுத்திட வேண்டும்; சண்முகபுரம், தங்கம்மாள்புரம், குசை நகர் பகுதி யில் பல ஆண்டுகளாக குடி யிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிட வேண்டும்; முத்தை யாபுரம் பகுதியில் அனைத்து தெருக்களி லும் வாருகால் வசதி செய்து கொடுக்க வேண்டும்; 100 நாள் வேலையை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், சமையல் கேஸ் விலை உயர்வை கட்டுப் படுத்திட வேண்டும்; மானியம் வழங்கிட வேண்டும்; முத்தையாபுரம் முதல் முள் ளக்காடு வரை நவீன கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாழைக்காய் விலை குறைப்பு செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
திருநெல்வேலி, மே 15- ஏர்வாடி பகுதியில் வாழைக்காய் விலை குறைப்பு செய்யும் வியாபாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடி, திருக்குறுங்குடி, வள்ளியூர், களக்காடு பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக நேந்திரன் என்ற ஏத்தன் வகை வாழை பயிரிடப்பட்டு வருகிறது. பல் லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்யப் பட்டு வரும் இவ்வகையான வாழைக்காய் ஒட்டு மொத்தமாக கேரளா சந்தையில் மட் டுமே சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான வாழைக்காய்களை உற்பத்தி செய்ய வாழை ஒன்றுக்கு ரூ.150 முதல் 180 வரை செலவாகிறது. இதில் சில விவசாயிகள் நிலங்களை குத்தகைக்கு வாங்கி பயிரிடும்போது செலவினம் பல மடங்கு அதிகரித்து விடுகிறது.வேலை ஆட்களின் கூலி கணிசமாக உயர்ந்து விட்டதால் மென்மேலும் செலவு அதிகரித்து விடுகிறது. வாழைக்காயை அறுவடை செய்ய 1 வருடம் ஆகிவிடுகிறது. இந்நிலை யில் வாழைகன்று நடவு செய்த நிலையிலி ருந்து அறுவடை செய்யும் வரை ஒரு சில ஏழை விவசாயிகள் பயிர் செலவினங்களுக் காக வாழைக்காய் வியாபாரிகளிடம் சிறிது சிறிதாக பணம் கடன் வாங்கி பருவம் செய்து வருகின்றனர்.அறுவடை சமயத்தில் கடன் கொடுத்த வாழைக்காய் வியாபாரிகள் வட்டி யும் முதலுமாக விவசாயிகளிடம் விலை குறைப்பு செய்து அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். அத்துடன் இந்த வியாபாரி கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரு வருக்கொருவர் தொடர்பு கொண்டு மிக குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். உதாரணமாக கேரளா சந்தையில் 1 கிலோ வாழைக்காய் விலை தற்போது ரூ.55 முதல் 60 வரை கொள்முதல் செய்யப்பட்டு வரு கிறது. ஆனால் இப்பகுதி வியாபாரிகள் தற்போது ரூ.25 முதல் 28 வரை விலை குறைப்பு செய்து வருகின்றனர். அத்துடன் வாழைக்காயை இடைத்தரகர்கள் வேண்டு மென்றே தற்காலிக விலை வீழ்ச்சி செய்து வருகின்றனர். இவ்வகையான இடைத்தர கர்கள் 10 டன் கொண்ட ஒரு லாரி வாழைக் காய்களை 10 பேரிடம் கைமாற்றி அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.பல்வேறு நிலை களில் மதிப்பு கூட்டல் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நேந்தி ரன் வகை வாழைக்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் இடைத் தரகர்கள் அதிக லாபம் சம்பாதித்து வரு வது வேதனையானது என சமூக ஆர்வ லர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.எனவே தமிழக அரசு உடனடியாக குளிர்சாதன கிடங்கை அமைப்பதுடன் வாழைக்காய் களுக்கு அரசின் சார்பில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயி கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் தாசில்தார் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.'
அறிவியல் மையத்தில் 5 நாட்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது
திருநெல்வேலி, மே 15- பன்னாட்டு அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முதல் 20-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தை பார்க்க பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அறிவியல் மையம் கொக்கிர குளத்தில் உள்ளது. இந்த மையத்திற்கு தினந்தோறும் ஏரா ளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பய ணிகள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சென்று பயன்பெற்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பொதுமக்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பன்னாட்டு அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு திங்கள் (16-ந்தேதி) முதல் 20-ந்தேதி வரை மாவட்ட அறிவியல் மையத்தை காண வரும் பார்வையா ளர்களுக்கு நுழைவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படு கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிவியல் மையத்தை கண்டுகளிக்கலாம். மேலும் தகவலுக்கு நேரிலோ அல்லது 914622500256 என்ற எண்ணிலோ அல்லது sciencecentrenellai@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில்
7 டன் பழைய துணிகள் அகற்றம்
திருநெல்வேலி, மே 15- பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றில் விட்டு செல்கின்றனர். இதனால் ஆற்றில் துணிகள் சேர்ந்து மோசமாக உள்ளது. அவ்வப்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆற்றில் சுற்றுலா பய ணிகள் விட்டுச்சென்ற துணிகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் கண்மணி உத்தர வின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ் தலை மையில் தூய்மை பணியாளர்கள் 7 டன் எடையுள்ள கழிவு துணிகளை அகற்றினார்கள். மேலும் 450 கிலோ எடை யுள்ள பிளாஸ்டிக் பொருட்களையும் பாபநாசம் படித்துறை யில் இருந்து அகற்றி நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.'
கட்டுமான தொழிலாளர் சங்க மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம்
நாகர்கோவில், மே 15- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் இறச்ச குளம் பகுதியில் நடைபெறவிருக்கும் கட்டுமான தொழிலா ளர் சங்க மாவட்ட மாநாட்டினை யொட்டி வரவேற்பு குழு கூட்டம் ஈசாந்திமங்கத்தில் நடைபெற்றது இதில் வரவேற்பு குழு தலைவர் ஈ. முருகன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. பி பெரு மாள் , சங்க மாநில நிர்வாகி எம் வேலம், சங்க ஒன்றிய தலைவர் கே எஸ் மகாதேவன், சிஐடியு வட்டார ஒருங்கி ணைப்பாளர் சக்தி வேல், சங்க வரவேற்பு குழு செயலாளர் சி.முருகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஒரே வாரத்தில் நல்லெண்ணெய் ரூ.184 உயர்ந்தது
விருதுநகர், மே15- பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில் விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை திடீரென 7 நாட்களில் ( 15 கிலோ) ரூ.184 வரை உயர்ந் தது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் நல்லெண்ணெய் டின் ஒன்றுக்கு ரூ.4538-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தவாரம் திடீரென உயர்வு ஏற்பட்டு ரூ.4702க்கு விற்கப்பட்டது. விருதுநகரில் பிரபலபமான எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் நல்லெண்ணெய் விலையை தீர்மானிப்பதில் இந்த நிறு வனங்களே முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் பாமாயில் விலை ரூ.110 வரை குறைந் துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.2640க்கு விற்கப்பட்டு வந்தது. இறக்குமதி அதிகரிப்பால் ஒரே வாரத்தில் ரூ.110 சரிவு ஏற்பட்டு ரூ.2530க்கு தற்போது விற்கப்படுகிறது. இதேபோல் முண்டு வத்தல் கடந்த வாரத்தை விட அதிக அளவில் சந்தைக்கு வந்துள்ள காரணத்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்த முண்டு வத்தல் விலையானது, இந்த வாரம் ரூ.18 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மேலும் கடலை எண்ணெய் ரூ.2800, துவரம் பருப்பு ( குவிண்டால்) ரூ.8200, நயம் துவரம் பருப்பு ரூ.9 ஆயிரம், பாசிப்பருப்பு ரூ.8900, லயன் உளுந்து ரூ.7100, பாசிப்பயறு ரூ.8600, பட்டாணி பருப்பு ரூ.5700 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.